இதுதான் தமிழ்நாடு! சிவன் கோவிலுக்கு சீர் கொண்டு வந்த இஸ்லாமியர்கள்! புன்னகைக்கும் புதுக்கோட்டை.!
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசலில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் அவ்விழாவிற்காக 2 கிராமங்களை சேர்ந்த இஸ்லாமியர்கள் சீர் கொண்டு வந்தனர்.
Recommended Video
பல தலைமுறைகளாக தங்களை கிராம பகுதி மக்களிடையே இது போன்ற மத நல்லிணக்கம் தொடர்வதாகவும் காலங்கள் கடந்தும் இதுபோன்ற நிகழ்வு தொடரும் என அந்த இரு மதங்களை சேர்ந்த மக்களும் மகிழ்வோடு தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்களநாயகி உடனுறை பாலாண்ட ஈஸ்வரர் சுவாமி ஆலயம் ஸ்ரீ நாடியம்மன் ஆலயம் மற்றும் பரிவார மூர்த்திகள் ஆலயங்களின் கும்பாபிஷேக விழா நாளை மிக விமர்சையாக நடைபெற உள்ளது.

கோவில் கும்பாபிஷேகம்
இந்த விழாவை முன்னிட்டு இன்று இரவு அந்தப் பகுதியின் கலாச்சாரத்தின் அடிப்படையில் புதுக்கோட்டை தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் உள்ள பல்வேறு கிராம மக்கள் நாட்டியக் குதிரை ஆட்டங்களுடனும் செண்டை உறுமி மேளங்கள் முழங்க கண்கவர் வாணவேடிக்கையுடன் நெடுவாசல் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு சீர் கொண்டு வரும் நிகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்லாமியர்கள் சீர்வரிசை
இந்நிலையில் அந்த விழாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலும் மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாகவும் அருகே உள்ள ஆவணம் மற்றும் காசிம்புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் பூ,பழம், இனிப்புகள் அடங்கிய தட்டுதாம்பழங்களை கையில் ஏந்தியபடி நெடுவாசல் கோயிலுக்கு சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாகச் கொண்டு வருகின்றனர்.

உற்சாக வரவேற்பு
அவர்களை நெடுவாசல் கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் மாலை அணிவித்து வரவேற்று இஸ்லாமியர்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.பின்னர் இஸ்லாமியர்கள் கொடுத்த சீர்வரிசை பொருட்கள் மற்றும் பணத்தை விழாக்குழுவினர் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர்.இந்த காட்சி காண்பவர்களுக்கு ஒரு வியப்பை ஏற்படுத்தியது.

பாரம்பரிய பழக்கம்
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக இப்பகுதி கிராமங்களில் உள்ள கட்டணங்களை இந்து கோயில்களின் திரு விழாவின்போது இஸ்லாமியர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பதும் அதேபோல் இஸ்லாமியர்களின் மசூதி திறப்பு விழா மற்றும் பெரு நாட்களுக்கு இந்துக்கள் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவிப்பது பாரம்பரியமாகத் தொடர்ந்து வருவதாகவும் மதங்களைக் கடந்து மனித நேயத்தை தங்கள் பகுதி கிராம மக்கள் தொடர்ந்து போற்றி வருவதாகவும் அப்பகுதி இஸ்லாமியர்கள் மற்றும் நெடுவாசல் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications