3 வேளையும் சோறு+ ஊறுகாய்! புதுக்கோட்டை சமூகநீதி விடுதியில் அவலம்! மாணவிகள் போராட்டம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் தங்கி படிக்கும் சமூகநீதி விடுதியில் மூன்று வேளையும் சாதம், ஊறுகாய் மட்டுமே உணவாக வழங்குவதாக கூறி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டையில் அரசு மகளிர் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்குள்ள சமூக நீதி விடுதியில் மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த விடுதியில் மாணவிகளுக்கு 3 வேளையும் சாதமும் ஊறுகாயும் மட்டுமே உணவாக வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாம்பார், ரசம், கார குழம்பு என எதுவுமே வழங்காமல் வெறும் ஊறுகாயை, சாதத்தில் பிசைந்து சாப்பிடும் நிலை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதை கண்டித்து தங்களுக்கு வழங்கப்பட்ட உணவுடன் மாணவிகள் போராட்டம் நடத்தினர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அது போல் ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் பிரவீனா மேரியும் நேரில் சென்றிருந்தார்.
அப்போது மாணவிகளிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து விடுதி வார்டன் சுபேதாவிடம், வட்டாட்சியர் பிரவீனா மேரி கேட்ட போது சமைப்பதற்கு மளிகை பொருட்கள் வரவில்லை. இதனால் தேவையான உணவை அவர்களுக்கு வழங்க முடியவில்லை என்றார்.
இதையடுத்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த பிரவீனா மேரி, விடுதி வார்டனை கடிந்து கொண்டார். "மளிகை பொருட்கள் வரவில்லை என்றால் சொல்ல மாட்டீர்களா, உங்கள் பிள்ளைகளாக இருந்தால் இப்படித்தான் ரோட்டில் உட்கார வைப்பீர்களா" என சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications