Jallikattu: தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி.. தச்சங்குறிச்சியில் தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் இன்று (டிசம்பர் 3 ஆம் தேதி) தொடங்கியது.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலேயே அதிகப்படியான வாடிவாசலைக் கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை. இங்கு தான் அதிகப்படியான, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் நடைபெறுவது வழக்கம்.

jallikattu thachankuruchi pudukottai

ஜனவரி 3 ஆம் தேதி தச்சங்குறிச்சியில் புனித விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு மற்றும் அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி கிராம ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கியிருந்தனர். ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் முழுமையாக நடைபெற்றுள்ளதா என்பது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா ஆய்வு மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, ஜனவரி 3 ஆம் தேதியான இன்று தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் நடத்த தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.

அந்த வகையில், 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 900 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+