40 நிர்வாண வீடியோ.. எதையுமே பார்க்க முடியல.. காதுகூசும் ஆபாச பேச்சுக்கள்.. அதிர வைக்கும் ஜெயக்குமார்
பெண்களை மிரட்டி.. நாசம் செய்த வங்கி ஊழியரை போலீசார் தேடி வருகிறார்கள்
புதுக்கோட்டை: இப்படி ஒரு காம பிண்டமா என்று ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது... பார்க்கும் பெண்களை எல்லாமே அசிங்கமாகவும், ஆபாசமாகவும் படம் பிடிக்கும் சைக்கோ பேர்வழிதான் எட்வின் ஜெயக்குமார்!
திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார்... வயது 36 ஆகிறது.. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை இந்தியன் பேங்கில் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.. கடந்த டிசம்பர் மாசம்தான் தஞ்சையை சேர்ந்த தாட்சர் என்பவருடன் எட்வினுக்கு கல்யாணம் ஆனது.
ஆனால், மனைவியிடம் நெருங்காமலேயே இருந்துள்ளார் எட்வின்.. மேலும் கணவரின் நடவடிக்கையில் புதுமனைவிக்கு நிறைய சந்தேகம் வந்துள்ளது.. ராத்திரிகளில் எந்த பெண்ணிடமாவது அசிங்கமாக பேசிக் கொண்டே இருந்துள்ளார். இதனால் ஒருநாள் எட்வினுக்கு தெரியாமல் அவரது செல்போனை எடுத்து பார்த்துள்ளார் தாட்சர்.

ஆபாச படங்கள்
அதில் ஏராளமான பெண்களின் ஆபாச படங்கள், நிர்வாண வீடியோக்களை கண்டு அதிர்ந்து போய்விட்டார்... இதை பற்றி புதுப்பெண், கணவரிடமும், அவனது மாமியர் லில்லி ஹைடாவிடமும் கேட்டுள்ளார்.. ஆனால் அவர்கள் தாட்சரிம் சரியாக பதில் சொல்லவில்லை.. அத்துடன் அவரை மிரட்டியதாகவும் தெரிகிறது. செல்போன் முழுவதும் ஆபாச படங்கள் இருந்துள்ளதால், அந்த பெண்கள் யார் என்று தாட்சர் ஆராய்ந்தார்.

ஆபாச எஸ்எம்எஸ்
அது மட்டுமில்லை.. மொத்தம் 15 செல்போன்கள் எட்விட் வைத்திருந்து இருக்கிறார்.. அவர்களில் பெரும்பாலும் பேங்க் கஸ்டமர்கள் என தெரியவந்துள்ளது.. அவர்களின் போட்டோ, செல்போன் நம்பர்களை பாஸ்புக்கில் இருந்து எடுத்து, நைசாக பேசி தன் வலையில் விழ வைத்து வந்துள்ளார்... ஆபாச செய்திகளை அனுப்பியவுடன் அவர்களிடம் இருந்து எந்த மாதிரியான பதில்கள் வருகிறது என்பதை பார்த்து, அவர்களை டார்கெட் செய்துள்ளார் எட்விட்.

மிரட்டல்
பலமுறை அந்த பெண்களை தனியே வரவழைத்து நெருக்கமாக இருந்திருக்கிறார்... இதையெல்லாம் கண்டு அலறிய தாட்சர், தன் பெற்றோரிடம் இதையெல்லாம் சொல்லி அழுதுள்ளார்.. அவர்களும் எட்வினையும், அவரது குடும்பத்தினரையும் கண்டித்து விட்டு போனார்கள். ஆனால் அன்றிலிருந்து, தாட்சரையும் ஆபாசமாக வீடியோ எடுத்து கொண்டு மிரட்ட தொடங்கி உள்ளார் எட்வின்.. சோஷியல் மீடியாவில் போட்டுவிடுவோம் என்று மிரட்டவும்தான், தாட்சர் போலீசுக்கு போயுள்ளார்.

தலைமறைவு
எட்வின் ஜெயக்குமார் உட்பட அவனது குடும்பத்தார் 5 பேர் மீதும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். தாட்சர் ஸ்டேஷன் வரை புகார் தந்துவிட்டார் என்பதால், எட்வின் ஜெயக்குமார் ஹைகோர்ட்டில் முன்ஜாமீனும் வாங்கி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த தாட்சர், கணவரின் அந்தரங்க புகைப்படங்கள், ஆபாச வீடியோக்கள் என 40 வீடியோவை மதுரை ஐகோர்ட்டில் சமர்ப்பித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரினார். இப்போது எட்வின் ஜெயக்குமார் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகளை பதிவு செய்து உடனடியாக கைது செய்ய ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications