புனே அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஈகோவை புத்தர் கைவிட சொன்னார்.. இந்த அறிவுரையை யாராவது மோடியிடம் சொல்லுங்க - சிவசேனா எம்பி

Google Oneindia Tamil News

புனே: ஈகோவை கைவிட்டால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற புத்தரின் அறிவுறுத்தலை பிரதமர் நரேந்திர மோடியிடம் யாராவது சொல்ல வேண்டும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "கவுதம புத்தரின் ஒரே ஒரு அறிவுரையை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றால், அது அகங்காரத்தை கைவிட வேண்டும் என்பது தான்.

Shiv Sena MP Sanjay Rawat says Modi should avoid ego as per Buddhas advice

அகங்காரத்தை கைவிடும் மனிதர்கள் வாழ்க்கையில் வெற்றியாளர்களாக திகழ்ந்துள்ளனர். ஆனால், சிலரோ அகங்காரத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். அதை ஓரம் வைத்துவிட்டால் நமது சமுதாயத்தில், நமது மாநிலத்தில், நமது நாட்டில் புரையோடிக் கிடக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இதை யாராவது பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவியுங்கள்." என்றார்.

மகாராஷ்டிராவில் மசூதிகளில் ஒலிபெருக்கிகளுக்கு எதிராக அனுமன் சலிசா பாடப்படும் விவகாரம் குறித்து பேசிய பேசிய அவர், "அனுமன் சலிசா பாடப்பட வேண்டியதுதான். ஆனால், மக்களின் பிரச்சனைகளும் முக்கியமானவை. சிவசேனா கட்சியை சேர்ந்த உள்ளாட்சி உறுப்பினர்கள் மக்களின் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும்

மக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சனைகளின் மீது கவலைப்படவும், கவனம் செலுத்தவும் வேண்டும். இதை நாம் ஒலிப்பெருக்கிகளில் அறிவிக்கவில்லை. ஆனால், இம்முறை சிவசேனாவின் பணிகளை ஒலிப்பெருக்கிகளில் சொல்ல வேண்டும்." என்றார்.

English summary
Shiv Sena MP Sanjay Rawat says Modi should avoid ego as per Buddha's advice: ஈகோவை கைவிட்டால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற புத்தரின் அறிவுறுத்தலை பிரதமர் நரேந்திர மோடியிடம் யாராவது சொல்ல வேண்டும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X