உயிரை பறித்த கிரிக்கெட் பந்து... நெஞ்சில் பட்டு இறந்த சிறுவன் - ராமநாதபுரம் அருகே சோகம்
ராமநாதபுரம்: கிரிக்கெட் விளையாடும்போது நெஞ்சில் பந்து பட்டு 11 வயது சிறுவன் உயிரிழந்தது அப்பகுதியில் பெரு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் அருகே வன்னிவயல் கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார். இவரது மகன் சுபாஷ் குமார்(11). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஓய்வு நேரத்தில் நண்பர்களுடன் எப்போதும் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார் சுபாஷ் குமார்.

கோடை விடுமுறை என்பதால் நேற்றும் தனது நண்பர்களுடன் வழக்கம்போல அப்பகுதியில் சுபாஷ் குமார் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த சிறுவன் சுபாஷ் குமாரின் நெஞ்சில் கிரிக்கெட் பந்து வேகமாக விழுந்தது. பந்து பட்ட வேகத்தில் சிறுவன் மைதானத்திலேயே மயங்கி விழுந்தார்.
அதிர்ச்சியடைந்த சிறுவனின் நண்பர்கள் உடனடியாக அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீஸார்கள் விசாரணை செய்து வருகின்றனர்.
கிரிக்கெட் விளையாடும்போது பந்து பட்டு மாணவர் உயிரிழந்த விவகாரம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications