பரமக்குடியில் பிளான் அப்ரூவல் கேட்ட இன்ஜினியர்.. நகரமைப்பு ஆபீஸரால் திணறிய ராமநாதபுரம் அரசு அலுவலகம்
ராமநாதபுரம்: பரமக்குடி நகராட்சியில் பதிவு பெற்ற இன்ஜினியர் ஒருவர், தன்னுடைய கஸ்டமருக்கு சொந்தமான 4 மாடி வீடு சம்பந்தமாக பிளான் அப்ரூவல் கேட்டு, டிபிஓ பர்குணன் என்பவரிடம் அணுகியிருக்கிறார். அங்கு என்ன நடந்தது தெரியுமா?
தமிழக பதிவுத்துறையானது மிதமிஞ்சி பணம் புழங்கும் துறையாகும்.. அதனால்தான், லஞ்சம் ஏராளமான நடமாடக்கூடிய துறையில் இது முதன்மையாக உள்ளது.. அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை இப்படியான லஞ்சத்தில் சிக்கி கொள்கிறார்கள். இதில் பெண் அதிகாரிகளும் அடக்கம்.

வருவாய்த்துறை: அதேபோல, வருவாய்த்துறையிலும் இப்படியான லஞ்சம் பெருகி கொண்டிருக்கிறது.. வருவாய்த்துறை அலுவலர்கள் லஞ்சம் வாங்கியதாக பல முறை செய்திகள் வெளியானதுடன், இவர்களை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரும் கைது செய்துள்ளனர்.
அதிகாரிகள் சேவை விதிகளை மீறினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், போலி பட்டா வழங்கல், பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் முறைகேடு போன்றவற்றில் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும்நிலையில், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தபடி உள்ளது.
ராமநாதபுரம்: இந்நிலையில், ராமநாதபுரத்தில் ஒரு அதிகாரி சிக்கியிருக்கிறார்.. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் பதிவு பெற்ற இன்ஜினியர் ஒருவர், தன்னுடைய கஸ்டமருக்கு சொந்தமான 4 மாடி வீடு கட்ட அப்ரூவல் கட்டணமாக, 76 ஆயிரத்து 850 ரூபாய் கட்டணம் செலுத்தியுள்ளார். இதையடுத்து, பிளான் அப்ரூவல் கேட்டு, டிபிஓ பர்குணன் என்பவரிடம் அணுகியிருக்கிறார்.
அதற்கு பர்குணன், ஒரு வீட்டு மனைக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம், 4 வீட்டு மனைக்கும் சேர்த்து 20 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்.. அப்படி பணம் தராவிட்டால், 4 ஃபைல்களும் கொஞ்சமும் நகராமல் அப்படியே டேபிளிலேயே கிடக்கும் என்று கூறியிருக்கிறார்.. இதைக்கேட்டு அதிர்ந்த இன்ஜினியர், உடனடியாக லஞ்ச ஒழிப்பு துறையை தொடர்பு கொண்டு தகவலை சொல்லி உள்ளார்.

லஞ்சம் பணம்: உடனே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், 20 ஆயிரம் ரூபாயை பர்குணனுக்கு, ஜி-பே மூலம் அனுப்பும்படி சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார்கள்.. அதன்படியே இன்ஜினியரும் பணத்தை ஜி-பே செய்துள்ளார்.. இதையேஆதாரமாக வைத்து 20,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பர்குணனை, லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
நேற்றுமுன்தினம்தான், தென்காசியில் பெண் விஏஓ ஒருவர் கைதானார்.. சுரண்டை அருகே பட்டா மாறுதலுக்கு 4800 ரூபாய் லஞ்சம் கேட்டாராம் விஏஓ பத்மாவதி..
இந்த லஞ்சம் வாங்கிய புகாரில், பெண் கிராம நிர்வாக அலுவலர் பத்மாவதியை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்திருந்தனர். இப்போது பரமக்குடி அதிகாரியும் கைதாகி உள்ளார். தினந்தோறும் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கைதாகி கொண்டிருப்பது பொதுமக்களுக்கு கவலையையும், அதிர்ச்சியையும் தந்து வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications