பரமக்குடியில் பிளான் அப்ரூவல் கேட்ட இன்ஜினியர்.. நகரமைப்பு ஆபீஸரால் திணறிய ராமநாதபுரம் அரசு அலுவலகம்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: பரமக்குடி நகராட்சியில் பதிவு பெற்ற இன்ஜினியர் ஒருவர், தன்னுடைய கஸ்டமருக்கு சொந்தமான 4 மாடி வீடு சம்பந்தமாக பிளான் அப்ரூவல் கேட்டு, டிபிஓ பர்குணன் என்பவரிடம் அணுகியிருக்கிறார். அங்கு என்ன நடந்தது தெரியுமா?

தமிழக பதிவுத்துறையானது மிதமிஞ்சி பணம் புழங்கும் துறையாகும்.. அதனால்தான், லஞ்சம் ஏராளமான நடமாடக்கூடிய துறையில் இது முதன்மையாக உள்ளது.. அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை இப்படியான லஞ்சத்தில் சிக்கி கொள்கிறார்கள். இதில் பெண் அதிகாரிகளும் அடக்கம்.

paramakudi

வருவாய்த்துறை: அதேபோல, வருவாய்த்துறையிலும் இப்படியான லஞ்சம் பெருகி கொண்டிருக்கிறது.. வருவாய்த்துறை அலுவலர்கள் லஞ்சம் வாங்கியதாக பல முறை செய்திகள் வெளியானதுடன், இவர்களை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரும் கைது செய்துள்ளனர்.

அதிகாரிகள் சேவை விதிகளை மீறினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், போலி பட்டா வழங்கல், பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் முறைகேடு போன்றவற்றில் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும்நிலையில், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தபடி உள்ளது.

ராமநாதபுரம்:
இந்நிலையில், ராமநாதபுரத்தில் ஒரு அதிகாரி சிக்கியிருக்கிறார்.. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் பதிவு பெற்ற இன்ஜினியர் ஒருவர், தன்னுடைய கஸ்டமருக்கு சொந்தமான 4 மாடி வீடு கட்ட அப்ரூவல் கட்டணமாக, 76 ஆயிரத்து 850 ரூபாய் கட்டணம் செலுத்தியுள்ளார். இதையடுத்து, பிளான் அப்ரூவல் கேட்டு, டிபிஓ பர்குணன் என்பவரிடம் அணுகியிருக்கிறார்.

அதற்கு பர்குணன், ஒரு வீட்டு மனைக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம், 4 வீட்டு மனைக்கும் சேர்த்து 20 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்.. அப்படி பணம் தராவிட்டால், 4 ஃபைல்களும் கொஞ்சமும் நகராமல் அப்படியே டேபிளிலேயே கிடக்கும் என்று கூறியிருக்கிறார்.. இதைக்கேட்டு அதிர்ந்த இன்ஜினியர், உடனடியாக லஞ்ச ஒழிப்பு துறையை தொடர்பு கொண்டு தகவலை சொல்லி உள்ளார்.

paramakudi

லஞ்சம் பணம்: உடனே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், 20 ஆயிரம் ரூபாயை பர்குணனுக்கு, ஜி-பே மூலம் அனுப்பும்படி சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார்கள்.. அதன்படியே இன்ஜினியரும் பணத்தை ஜி-பே செய்துள்ளார்.. இதையேஆதாரமாக வைத்து 20,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பர்குணனை, லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

நேற்றுமுன்தினம்தான், தென்காசியில் பெண் விஏஓ ஒருவர் கைதானார்.. சுரண்டை அருகே பட்டா மாறுதலுக்கு 4800 ரூபாய் லஞ்சம் கேட்டாராம் விஏஓ பத்மாவதி..

இந்த லஞ்சம் வாங்கிய புகாரில், பெண் கிராம நிர்வாக அலுவலர் பத்மாவதியை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்திருந்தனர். இப்போது பரமக்குடி அதிகாரியும் கைதாகி உள்ளார். தினந்தோறும் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கைதாகி கொண்டிருப்பது பொதுமக்களுக்கு கவலையையும், அதிர்ச்சியையும் தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+