நான்தான்டா ஆத்தா.. 8 வருடமாக பூட்டி கிடந்த கோவில்.. திறக்க வந்த தாசில்தார்.. சாமியாடியதால் பரபரப்பு!
பூட்டிக்கடந்த கோவிலை திறக்க வந்த தாசில்தார் சாமியாடினார்
ராமநாதபுரம்: 8 வருஷமா பூட்டி கிடந்த கோவிலை திறக்க வந்த தாசில்தாருக்கு திடீரென சாமி வந்துவிட்டது. அதனால் பொதுமக்கள் முன்னிலையிலேயே சாமியாடினார்.
ராமநாதபுரம் சாயல்குடி அருகே மேலக்கிடாரம் என்ற கிராமம் உள்ளது. இங்கு திருவடி அய்யனார் கோவில் புரவி எடுப்பு, உய்யவந்தம்மன் முளைப்பாரி திருவிழா போன்றவை ரொம்ப பிரபலம்.

கடந்த 300 வருஷங்களாகவே இந்த திருவிழா நடந்து வருகிறது. ஆனால், 2012-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் முன்பகை காரணமாக திருவிழா நடத்தாமல் நிறுத்தப்பட்டது. சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, கோவிலும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனால் கடந்த 8 வருஷங்களாக திருவிழா நடக்கவே இல்லை.
இந்நிலையில், இந்த திருவிழாவை நடத்துவதற்கு கிராம மக்கள் கூட்டம் போட்டு, புரட்டாசி மாசத்தில் திருவிழாவை நடத்தி அமர்க்களப்படுத்தி விட வேண்டும் என்று தீர்மானம் போட்டனர். ஆனால் இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, மதுரை ஐகோர்ட்டில் அமமுக சாயல்குடி ஒன்றிய செயலாளர் பச்சைக்கண்ணு மனு செய்தார். ஆனால் இந்த மனு நிராகரிக்கப்பட்டு, திருவிழா நடத்த அனுமதி தரப்பட்டது.
இதையடுத்து, கிராம மக்கள், அதனை தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் விழா கமிட்டியாளர்கள் உய்யவந்தம்மன் கோவில் முளைக்கொட்டு வாசலை திறந்து வைக்க கடலாடி தாசில்தார் முத்துக்குமாரிடமும், போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேஷ் ஆகியோரிடமும் மனு அளித்தனர்.
இந்த மனுவை ஏற்று, கடலாடி தாசில்தார் முத்துக்குமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் முன்னிலையில் கோவிலை திறந்தனர். ஆனால் கோவிலை திறக்கும் சமயத்தில், தாசில்தாருக்கு திடீரென சாமி வந்துவிட்டது. அம்மன் அருள் வந்து பொதுமக்கள் முன்னிலையிலேயே சாமியாடினார். இதை பார்த்த ஊர் மக்களும் பரவசமாகி விட்டனர். திருவிழா நடக்கும் சந்தோஷத்தில் இருந்த மக்களுக்கு தாசில்தார் சாமியாடியது மேலும் உற்சாகத்தை தந்துவிட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications