மாடு திடீரென குறுக்கே வந்ததால் விபரீதம்.. சுற்றுலா வேன் கவிழ்ந்து பலி! ராமநாதபுரத்தில் அதிர்ச்சி!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கழனிக்குடி என்ற இடத்தில் சுற்றுலா வேன், குறுக்கே மாடு வந்ததால் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவண்ணாமலையில் இருந்து இராமேஸ்வரத்திற்கு ஒரு வேனில் சுற்றுலா வந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் அருகே கழனிக்குடி என்ற பகுதியில் பயணிகளுடன் சுற்றுலா வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் திடீரென மாடு ஒன்று குறுக்கே வந்ததால் ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்தபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் திருவண்ணாமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயமடைந்த 14 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இரவு நேரத்தில் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications