மெக்காவில் உம்ரா செய்ய சவுதி அரேபியா அரசு அனுமதி... படிப்படியாக தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்..!
ரியாத்: இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவிற்கு வர யாத்ரீகர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது சவுதி அரேபியா அரசு.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மெக்கா மற்றும் மதீனா ஆகிய இரண்டு தலங்களிலும் யாத்ரீகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ரமலான் மாதத்தில் கூட கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்திய அந்நாட்டு அரசு மிக சொற்ப எண்ணிக்கையில் மட்டும் ரமலான் மாத இரவு சிறப்புத் தொழுகையில் (தராவீஹ் தொழுகை) பங்கேற்க அனுமதி அளித்தது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த தொடங்கியுள்ள சவுதி அரேபியா, முதற்கட்டமாக இன்று முதல் 30 % யாத்ரீகர்கள் மெக்காவில் உம்ரா செய்ய (சிறப்பு வழிபாடு) அனுமதி வழங்கியுள்ளது. அடுத்தக்கட்டமாக அக்டோபர் 18 முதல் 75% யாத்ரீகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

மேலும், நவம்பர் 1-ம் தேதி முதல் கட்டுப்பாடுகளில் படிப்படியாக இன்னும் கூடுதல் தளர்வுகள் கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 100% யாத்ரீகர்களுக்கு உம்ரா செய்ய அனுமதி வழங்குவது பற்றி இப்போதும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கொரோனா தொற்று பரவுவது முற்றிலும் முடிவு வரும் போது அது பற்றி முடிவெடுக்கக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
மெக்காவில் உம்ரா செய்வதற்காக (சிறப்பு வழிபாடு) சவுதி அரேபியாவில் வசிக்கக்கூடிய வெளிநாட்டினர் மற்றும் உள்நாட்டினர் என இதுவரை ஒரு லட்சத்து எட்டாயிரம் பேர் முன் அனுமதி பெற்றிருப்பதாகவும் நபர் ஒருவருக்கு மூன்று மணி நேரம் அனுமதி அளிக்கப்படுவதாகவும் சவுதி அரசு அறிவித்துள்ளது.
நாள்தோறும் 6 ஆயிரம் பேருக்கு மட்டும் முதற்கட்டமாக மெக்காவில் உள்ள காஃபாவை சுற்றி வர அனுமதி தரப்பட்டிருக்கிறது. உரிய சமூக இடைவெளியை கண்காணிப்பதுடன் கிருமி நாசினிகளை கொண்டு அடிக்கடி தூய்மைப் படுத்தும் பணிகளையும் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications