ஹார்முஸுக்கு பிறகு ஒரே நம்பிக்கை "யான்பு".. அதையும் விடாமல் தாக்கும் ஈரான்! கொந்தளிக்கும் சவுதி
ரியாத்: மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக இதர வளைகுடா நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் யான்பு துறைமுகம் வழியாக வர்த்தகம் நடந்து வந்த சூழலில் அதுவும் இப்போது பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படி எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு வந்தால் அது மிகப் பெரிய பேரழிவையே ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
சவுதி அரேபியாவின் யான்புவில் உள்ள அராம் கோ நிறுவனத்தின் சாம்ரெஃப் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது வான்வழித் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. ஈரான் எரிசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க இஸ்ரேல் தாக்குதல்களுக்குப் பதிலடியாகக் கத்தார் மற்றும் ஐக்கிய அமீரகத்தை ஈரான் தாக்கி வருகிறது.

தாக்குதல்
இந்தச் சூழலில் தான் சாம்பெஃப் சுத்திகரிப்பு மையம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், நல்வாய்ப்பாக இதில் பாதிப்பு குறைவாகவே ஏற்பட்டதாகச் சவுதி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு முன்பே, சாம்ரெஃப் உள்ளிட்ட பல வளைகுடா பிராந்திய நிறுவனங்களுக்கு ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதாவது தாக்குதல் நடத்தப் போகிறோம் உடனடியாக அங்கிருந்து வெளியேறுங்கள் என எச்சரிக்கை விடுத்த பிறகே ஈரான் தாக்குதலை நடத்தியிருந்தது.. இதுவரை இத்தாக்குதல் குறித்து சவூதி அராம் கோவ் இதுவரை எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.
அச்சுறுத்தல்
இந்த தாக்குதல் உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கடந்த மாதம் போர் தொடங்கிய பிறகு ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியது. உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே சென்றது. அதை ஈரான் முடக்கிவிட்டு வரிசையாக மிரட்டல் கொடுத்து வருகிறது. இதனால் அன்று முதல், யான்பு துறைமுகம் தான் வளைகுடா அரபு நாடுகளுக்கான முக்கிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி வழிகளில் ஒன்றாகச் செயல்படுகிறது.
சுற்றிச் சுற்றி தாக்குதல்
மற்றொரு முக்கிய ஏற்றுமதி முனையான ஐக்கிய அமீரகத்தின் புஜைரா துறைமுகமும் உள்ளது. ஆனால், இந்த இரண்டின் மீதும் ஈரான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கடந்த வியாழக்கிழமை வரை அங்குச் சரக்கு ஏற்றும் ஏற்றுமதி பணிகள் எதாவது நடந்தனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அந்தளவுக்கு மத்திய கிழக்கில் நிலைமை மோசமாக இருக்கிறது.
ஈராக் மற்றும் ஈரானை உள்ளடக்கிய வளைகுடா பகுதி தான், உலகின் எண்ணெய் உற்பத்தியில் 31 சதவீதத்தையும், உலக எரிவாயு உற்பத்தியில் 8 முதல் 17 சதவீதத்தையும் வழங்குகிறது. ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டால் எண்ணெய் விநியோகப் பாதிப்பு ஏற்பட்டு, உலகெங்கும் எரிசக்தி நெருக்கடி உருவாகியுள்ளது. இது எப்போது சீராகும் எனத் தெளிவாகத் தெரியாததால் கச்சா எண்ணெய் விலை உயர ஆரம்பித்துவிட்டது.
பதிலடி
மத்திய கிழக்கு மோதல்கள் தீவிரமடைந்த நிலையில், ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாகவே ஈரான் தனது அண்டை நாடுகளில் உள்ள எண்ணெய் வயல்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த புதன்கிழமை, கத்தாரின் LNG மையமான ராஸ் லஃபான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் கணிசமான அளவுக்குச் சேதம் ஏற்பட்டு இருந்தது.
அதே புதன்கிழமை, ரியாத்தை நோக்கி ஏவப்பட்ட நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டது. இருப்பினும், அதை இடைமறித்து அழித்ததாகச் சவுதி அரேபியா அறிவித்தது. இதுபோல ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் சவுதியைப் போலவே ஐக்கிய அமீரகமும் இப்போது ஒரு ட்ரோன் இடைமறிப்பை சிஸ்டத்தை நிலைநிறுத்தியுள்ளது.
எச்சரிக்கும் சவுதி
ஈரான் பதிலடி கொடுத்தாலும் பொறுமையாக இருக்கும் இதர வளைகுடா நாடுகள் எப்போது வேண்டும் என்றாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழலே இருக்கிறது. சமீபத்தில் சவுதி கூட ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கத் தங்களுக்கு உரிமை உண்டு என்றும் ஈரான் மீதான நம்பிக்கை தகர்ந்துவிட்டது என்றும் எச்சரித்தது. சமீப காலங்களில் ஈரானுக்கு எதிராகச் சவுதி இதுபோல எச்சரித்துள்ளது இதுவே முதல்முறை. இதனால் இது பிராந்திய போராக வெடிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
-
அணு அட்டாக் நடக்கும்.. பல லட்சம் கோடி பெட்டிங்.. அணு பேரழிவு வரலாம்.. உலக சுகாதார மையம் வார்னிங் -
பூமிக்குள் ஊடுருவி வெடிக்கும்! ஈரான் மீது பங்கர் பஸ்டர் குண்டு வீச்சு.. டார்க்கெட் ஹார்முஸ் ஜலசந்தி -
ஈரானுக்குள் இறங்கும் அமெரிக்க படை? டிரம்ப் கையில் பெரிய பிளான்.. நீண்டகாலம் சண்டை நடக்க வாய்ப்பு -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
சண்டைக்கு மட்டும் வாங்க.. சமாதானத்துக்கு வாய்ப்பே இல்லை! ட்ரம்பை லெஃப்ட் ஹேண்ட்டில் டீல் செய்யும் ஈரான்! -
நூலிழையில் தப்பிய ஈரான் உச்ச தலைவர்.. அமெரிக்கா - இஸ்ரேல் அட்டாக்கில் எஸ்கேப்பானது எப்படி? திக்திக் -
அப்போ வெனிசுலா.. இப்போது ஈரான்! ஜனநாயகத்தை காப்பதாக சொல்லிக்கொள்ளும் டிரம்ப்! ஆனால் பிளான் வேற! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
ஈரானுக்கு ஆதரவாக உள்ளே வரும் சீனா.. மிக பெரிய ட்விஸ்ட் கொடுத்த ஜின்பிங்.. அடுத்து என்ன நடக்கும்? -
"நாங்க ஷாக் ஆயிட்டோம்!".. உதவி கேட்டு கதறும் டிரம்ப்.. ஈரானிடம் மண்டியிடுகிறதா அமெரிக்கா? -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம்












Click it and Unblock the Notifications