"வார்னிங்.." சவுதி அரேபியாவில் இடி மின்னலுடன் கொட்ட போகுது கனமழை.. பொதுமக்களுக்கு பரபர அலர்ட்
ரியாத்: சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளிலும் நாளை புதன்கிழமை வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.
பாலைவன நாடான சவுதியில் ஆண்டின் பெரும்பாலான காலம் வெயில் தான் அதிகமாக இருக்கும்.. ஒரு ஆண்டிற்கு சில செமீ மழை தான் பெய்யும். ஆனால் இந்தாண்டு அங்கு நிலைமை நேர்மாறாக இருக்கிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஐக்கிய அமீரகம், சவுதி உள்ளிட்ட நாடுகளில் நல்ல மழை பெய்தது. இதனால் சில இடங்களில் வெள்ளம் கூட ஏற்பட்டது. இதற்கிடையே சவுதிக்கு மீண்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை: அதன்படி சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளிலும் நாளை புதன்கிழமை வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. மழை தீவிரமானதாக இருக்கலாம் என்பதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இஸ்லாமியர்களின் புனித தளமான மக்கா பகுதியில், மிதமான முதல் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் திடீர் வெள்ளம், ஆலங்கட்டி மழை மற்றும் மணல் புயல்களுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தைஃப், மெய்சான், ஆதம், அல் அர்தியத் மற்றும் அல் கமில் உள்ளிட்ட பகுதிகள் இந்த மழையால் அதிகம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மக்கா மற்றும் அருகிலுள்ள பகுதிகளான ஜும்ம், பஹ்ரா, ரனியா, குர்மா மற்றும் மோயா போன்ற இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
எங்கெல்லாம் மழை பெய்யும்: சவுதி தலைநகர் ரியாத் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் இதனால் திடீர் வெள்ளம், ஆலங்கட்டி மழை மற்றும் மணல் புயல் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அஃபிஃப், தவாத்மி, குவையா, மஜ்மா, அல் காட், ஷக்ரா, அஸ் சுல்பி, தாடிக், முராத் மற்றும் வாடி அல் தவாசிர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜசான், ஆசிர் மற்றும் அல் பஹா பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அதேபோல ஜசான், மதீனா, ஹைல் மற்றும் காசிம் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை: மழை அதிகம் பெய்யும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் இந்த மோசமான வானிலையின் போது தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், திடீர் வெள்ளம் ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் நீர் தேங்கக்கூடிய இடங்களிலிருந்து விலகி இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-
அடிச்ச வெயிலுக்கு.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! கொட்டப்போகும் மழை! -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications