கொரோனா பீதி.. மளிகைப் பொருட்கள் வரத்து இல்லை.. வியாபாரிகள் தகவல்.. விலை கடுமையாக உயரும் அபாயம்
சேலம்: கொரானா வைரஸ் பீதி காரணமாக மளிகை பொருட்கள் வரத்து இல்லை என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர் மளிகை பொருட்கள் வரத்து 95% குறைந்துவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய உணவுப்பொருட்கள் வரத்து குறைந்துள்ளது. தற்போதைய சூழலில் ஒரு சில பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த பொருட்களின் விலையும் கடுமையாக ஏறி உள்ளது. இந்த விலை உயர்வு பொது மக்களை மேலும் சுமைக்கு உள்ளாக்கியுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் மளிகை பொருட்களின் தேவையை வடமாநிலங்கள் தான் 70 சதவீதம் பூர்த்தி செய்வதாக வியாபாரிகள் கூறுகிறார்கள். ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக மளிகை பொருட்களின் சப்ளை 95 சதவீதம் குறைந்துள்ளதாகவும் ஊரடங்கு உத்தரவு அமலான 12 நாட்களில் மளிகைப் பொருட்களில் 75% பொருட்கள் விற்று தீர்ந்து விட்டது என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
மக்கள் அனைவரும் தற்போது வீடுகளில் முடங்கி உள்ளதால் காய்கறி மளிகை பொருட்களின் செலவும் வழக்கத்தைவிட 20 முதல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது அரவை ஆலைகள், தொழில் நிறுவனங்கள், மொத்த விற்பனையாளர்களிடம் 15 நாட்களுக்கு தேவையான மளிகைப் பொருட்கள் இருப்பில் உள்ளன. இந்த பொருட்களை தற்போது வெளியே கொண்டுவர முடியவில்லை என்று வியாபாரிகள் கூறுகிறார்கள் ஏனெனில் கொரோனா வைரஸ் பீதியால் உணவு பொருட்களை ஏற்றிச் செல்லும் டிரைவர்கள் பணிக்கு வர தயக்கம் காட்டி வருகிறார்கள்.
இதேபோல் பொருட்களை ஏற்றி இறக்கும் கூலி தொழிலாளர்களும் சரிவர வேலைக்கு வருவதில்லை. இதுபோன்ற காரணங்களால் மளிகை கடைகளுக்கு உணவு பொருட்கள் சப்ளை செய்ய முடியவில்லை என்று வியாபாரிகள் கூறுகிறார்கள். மேலும் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மட்டுமே செயல்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது . இந்த நேரத்தில் வியாபாரிகள் கடைகளில் இருப்பதால் மளிகை பொருட்களை எடுத்து வர முடியவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். எனவே மளிகை பொருட்கள் வரத்து குறைந்து கொண்டே வந்தால் விலை அதிகரிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications