கே சி பழனிச்சாமியை மீண்டும் அதிமுகவில் சேர்த்தோமா.. நாங்க எப்ப சொன்னோம்.. எடப்பாடி தடாலடி!
Recommended Video

ஓமலூர்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிச்சாமியை அதிமுகவில் இணைத்துக் கொண்டதாக நாங்கள் யாராவது கூறினோமா என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அதிமுகவின் பதவி விவகாரங்களில் கே.சி. பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தார்.

இணைப்பு
இந்த நிலையில் நேற்றைய தினம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி ஆகியோரை தலைமை செயலகத்தில் கே சி பழனிச்சாமி சந்தித்து பேசினார். இதையடுத்து ஓபிஎஸ்- ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் என பேட்டி அளித்தார்.

முன்னாள் எம்பி
இந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவர் முதல்வரை சந்தித்தார் என்றார்.

பழனிச்சாமியை சேர்க்கவில்லை
இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கே.சி. பழனிச்சாமி நாங்கள் கட்சியில் சேர்க்கவில்லை. கே சி பழனிச்சாமியை மீண்டும் அதிமுகவில் சேர்த்ததாக நாங்கள் கூறினோமா?

அலுவலகத்தில்
சில கோரிக்கைகள் தொடர்பாகத்தான் என்னை அவர் சந்தித்தார். அதிமுகவில் யாரையாவது சேர்த்தால் கட்சி தலைமை அலுவலகத்தில்தான் அது நடக்கும் என்றார் முதல்வர்.












Click it and Unblock the Notifications