மதுரையை சிட்னின்னா.. சேலம் அமெரிக்காலே.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பலே ஒப்பீடு
சேலம்: சேலம் அமெரிக்கா போல் மாறி வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சேலம் செவ்வாப்பேட்டை- இளம்பிள்ளை சாலை, புழுதிக்குட்டை- சந்துமலை சாலை, பேளூர்- கிளாக்காடு சாலை ஆகிய 3 இடங்களில் ரூ. 40 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசுகையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை குறைக்க சேலத்தில் உயர்நிலை பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சேலம்- செங்கம்பள்ளி 8 வழிச்சாலை திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
சேலத்தின் வளர்ச்சி அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கு இணையாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் ரோகிணி கலந்து கொண்டார். இதில் 4,049 பணியாளர்களுக்கு 12 கோடி ரூபாயில் நலத்திட்டங்களை வழங்கினார்.
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் வந்த போது அமைச்சர் செல்லூர் ராஜூவோ மதுரை சிட்னியாக மாறும் என்றார். ஆனால் முதல்வரோ சேலம் அமெரிக்கா போல் வல்லரசாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications