திமுகவை பின்னுக்கு தள்ளிய 'டிவி' சின்னம்! எடப்பாடியில் விஜய் ரசிகர் Blast! யார் இந்த பிரேம்குமார்?
சேலம்: அதிமுக கோட்டையான எடப்பாடி தொகுதியில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தத் தொகுதியின் இரண்டாம் இடம் குறித்த தகவல் அரசியல் வட்டாரங்களை அதிர வைத்துள்ளது.
திமுக வேட்பாளரை முந்திக்கொண்டு, 50,823 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை ஒரு சுயேச்சை வேட்பாளர் பிடித்துள்ளார். அவர் வேறு யாருமல்ல, தவெக தலைவர் விஜய்யின் தீவிர ஆதரவாளர் பிரேம்குமார்.

எடப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி 1,48,933 வாக்குகளை பெற்று வென்றார். சுமார் 98,110 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். அது போல் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் 44011 வாக்குகளை பெற்று 3ஆவது இடத்தில் உள்ளார்.
அப்படியென்றால் 2-ஆவது இடத்தில் சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமார் 50,823 வாக்குகளை பெற்றுள்ளார். எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்புமனு தள்ளுபடியான நிலையில் இந்த சுயேச்சை வேட்பாளரின் டிவி சின்னத்தில் வாக்களிக்குமாறு விஜய் இவருக்கு ஆதரவு தந்தார்.
யார் இந்த பிரேம்குமார்?
எளிய பின்னணி: 43 வயதான பிரேம்குமார், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பயின்றுள்ள இவர், தனது வாழ்வாதாரத்திற்காக ஒரு சிறிய புகைப்பட ஸ்டுடியோ (Photo Studio) நடத்தி வருகிறார்.
விஜய் விசுவாசி: நீண்ட காலமாக விஜய் ரசிகர் மன்றத்தின் (VMI) தீவிர நிர்வாகியாகப் பணியாற்றி வரும் இவர், எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளராகப் போட்டியிட விரும்பினார்.
திடீர் திருப்பம் - வேட்புமனுத் தள்ளுபடி
எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த அருண்குமாரின் மனு தொழில்நுட்பக் காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. இதனால் அந்தத் தொகுதியில் தவெக-விற்கு அதிகாரப்பூர்வ வேட்பாளர் இல்லாத இக்கட்டான நிலை உருவானது.
விஜய்யின் 'மாஸ்டர் பிளான்' (Master Plan): தனது கட்சியின் வேட்பாளர் இல்லையென்றாலும், தனது விசுவாசியான சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமாரை விஜய் கைவிடவில்லை.
ஆதரவு அறிவிப்பு: கடந்த ஏப்ரல் 19 அன்று, எடப்பாடி தொகுதி தவெக தொண்டர்கள் அனைவரும் பிரேம்குமாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என விஜய் பகிரங்கமாக அறிவித்தார்.
சின்னம்: பிரேம்குமாருக்கு ஒதுக்கப்பட்ட 'டெலிவிஷன்' (TV) சின்னத்தைத் தொகுதி முழுவதும் தவெக தொண்டர்கள் வீடு வீடாகக் கொண்டு சென்றனர்.
திமுகவிற்கு விழுந்த அடி: தேர்தல் முடிவுகள் வெளியானபோது, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி 1,48,933 வாக்குகள் பெற்று வென்றார். ஆனால், ஆளுங்கட்சியான திமுக வேட்பாளர் பெற்ற 44,011 வாக்குகளை விட அதிகமாக, பிரேம்குமார் 50,823 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
ஒரு போட்டோகிராபர், முதல்வர் மு.க. ஸ்டாலினின் கட்சியின் வேட்பாளரையே தோற்கடித்து இரண்டாம் இடத்தைப் பிடித்திருப்பது, எடப்பாடி தொகுதியில் விஜய்யின் செல்வாக்கு எந்த அளவிற்கு ஆழமாகப் பரவியுள்ளது என்பதைக் காட்டுகிறது.












Click it and Unblock the Notifications