சேலத்தில் இன்று தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம்: விஜய் பங்கேற்பாரா?
சென்னை: சேலத்தில் மாநில அளவிலான கொள்கை விளக்க முதல் பொதுக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு சேலம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த பொதுக் கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை தாங்குகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால நலனை நோக்கிய தமிழக வெற்றிக்கழக பயணத்தின் அடுத்தகட்டமாக, மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் உத்தரவின்பேரில், நம் கட்சியின் குறிக்கோள்களையும், கொள்கைகளையும் தமிழக மக்களிடையே கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.

தவெக குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் 5 மண்டலங்கள், தவெக நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்ட 120 மாவட்டங்கள் மற்றும், 12,500 கிளைகளில் தவெக கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தின்படி, மாநில அளவிலான கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு சேலம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த பொதுக் கூட்டத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை தாங்குகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற தவெக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இறுதி நேரத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றிருந்த நிலையில், சேலத்தில் நடைபெறும் இந்த தவெக கொள்கை விளக்க முதல் பொதுக் கூட்டத்தில் கட்சித் விஜய் பங்கேற்பாரா என்று எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே எழுந்துள்ளது. சேலத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்திலும் விஜய் பங்கேற்பதற்கான வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications