திமுக ஆட்சியை கலைக்க அரைமணி நேரம் போதும்! கே.பி.ராமலிங்கம் பேச்சால் வெடித்த சர்ச்சை!
சேலம்: திமுக ஆட்சியை கலைப்பதற்கு தங்களுக்கு அரை மணி நேரம் போதும் என பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் பேசியிருக்கிறார்.
பிரதமர் மோடி ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்று நினைப்பதால் திமுகவினர் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்து பேசி வருவதாகவும் சாடினார்.
பிரதமர் மோடி இந்த நிமிடம் நினைத்தால் கூட அடுத்த அரை மணி நேரத்தில் திமுக ஆட்சி தமிழ்நாட்டில் கலைக்கப்படும் என்றும் இருக்கும் இடம் தெரியாமல் ஆட்சி காணாமல் போய்விடும் எனவும் கே.பி.ராமலிங்கம் பேசியிருக்கிறார்.

தாங்கள் நினைத்தால் உடனடியாக ஆட்சியையே கலைக்க முடியும் என்று பொதுவெளியில் கே.பி.ராமலிங்கம் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நடைபெற்று வரும் ஒரு ஆட்சியை, போகிற போக்கில் கலைத்துவிடுவோம் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் ராமலிங்கம் பேசியிருப்பது அவருக்கே பாதகமாக அமைந்துள்ளது.

கே.பி.ராமலிங்கம் திமுகவில் இருந்த போது மாநிலங்களவை உறுப்பினராகவும், தென்னை விவசாயிகள் நல வாரியத்தின் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவில் இருந்த காலத்தில் மு.க.அழகிரியின் ஆதரவாளராக அறியப்பட்ட கே.பி.ராமலிங்கம் ஸ்டாலினுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வந்தார் என்பது திரும்பிப் பார்க்கத்தக்கது.
இதனிடையே ஆட்சியை கலைப்போம் என திமுகவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ள கே.பி.ராமலிங்கத்துக்கு திமுகவினர் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.












Click it and Unblock the Notifications