இயற்கை வளங்கள் சுரண்டப்படுகிறது… இந்தியா நீரற்ற நாடாக மாறும்… சீமான் காட்டம்
சேலம்: நம்பிக்கையும், தைரியமும் இல்லாதவர்களே கூட்டணி வைக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட சீமான், வாழ்க்கை நெறியை போதிக்காத கல்வி இருப்பதால் தான் பாலியல் வன்கொடுமை போன்றவை நடக்கின்றன என்று கடுமையாக சாடினார்.

செல்போன் கொடுக்கும் அரசு 130 கோடி பேருக்கு தண்ணீர் கொடுக்க என்ன திட்டம் வைத்திருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதால் விரைவில் இந்தியா நீரற்ற நாடாக மாறும் என்றும் சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் தரமற்று இயங்குவதாகவும் குற்றம் சாட்டினார்.
முன்னதாக, ஒவ்வொரு தொகுதியிலும் 40 கோடி, 50 கோடி பதுக்கி வைத்து, வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கப்படுவதாகவும், இதனை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தொகுதிக்குள்ளே சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சீமான் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications