ஆஹா அட்சய பாத்திரமான காவிரி.. 2-ஆவது முறையாக 120 அடியை எட்டிய மேட்டூர் அணை
Recommended Video
சேலம்: மேட்டூரில் உள்ள ஸ்டான்லி நீர் தேக்கமானது இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக 120 அடி கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகத்தில் உள்ள அணைகளிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை கடந்த 7-ஆம் தேதிதான் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
இதைத் தொடர்ந்து அந்த அணையிலிருந்து 75 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. பின்னர் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர் மட்டமும் 119.9 அடியாக இருந்தது.

60 ஆயிரம் கனஅடி
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதையடுத்து அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு 30 ஆயிரம் கனஅடியிலிருந்து 60 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

இருப்பு
தற்போது அணையின் இருப்பு 93.758 டிஎம்சியாக உள்ள நிலையில் டெல்டா விவசாயிகளுக்காக 32,500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அது போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கும் வினாடிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்படும்.

16 மதகுகள்
இதையடுத்து காவிரி டெல்டாவில் உள்ள 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 16 மதகுகள் வழியாக 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

மழைநீருடன் கழிவுநீர்
சேலம் மாவட்டத்தில் 804 மி.மீ மழை பெய்துள்ளது. சேலம் நகரத்தில் மட்டும் 87 மி.மீ. மழை பெய்ததால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்துவிட்டது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications