கட்சியில் இருந்து நீக்குவதா? பொதுச்செயலாளர் சசிகலாதான்.. ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு அதிமுக நிர்வாகி நோட்டீஸ்
சேலம்: அதிமுகவில் இருந்து தம்மை நீக்கியதற்கு உரிய விளக்கம் தரக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாக்கு மாஜி அதிமுக நிர்வாகி எடப்பாடி சுரேஷ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதிமுகவை எப்படியாவது கைப்பற்றியாக வேண்டும் என்பதில் சசிகலா படுமும்முரமாக இருக்கிறார். இதுவரை நூற்றுக்கணக்கான ஆடியோ உரையாடல்களை வெளியிட்டு அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார்.
அப்படி சசிகலாவுடன் தொலைபேசியில் பேசும் நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து தொடர்ந்து நீக்கப்பட்டு வருகின்றனர். இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத சசிகலா, நேற்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடல்நலம் விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார்.

அப்பல்லோ பரபரப்பு
அப்போதுதான் எடப்பாடி பழனிசாமியும் மதுசூதனனை பார்க்க அப்பல்லோ சென்றிருந்தார். எதிரும் புதிருமாக இருக்கும் நிலையில் சசிகலாவை நேருக்கு நேர் சந்திக்காமல் சட்டென புறப்பட்டு சென்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவில் சசிகலா இப்படித்தான் ஒவ்வொரு நாளும் பரபரப்பை கிளப்பி வருகிறார்.

கட்சி நிர்வாகி நீக்கம்
இந்த நிலையில் சசிகலாவுடன் தொலைபேசியில் இருந்து பேசியதற்காக அதிமுகவில் இருந்து கடந்த 5-ந் தேதி எடப்பாடி சுரேஷ் என்ற நிர்வாகி நீக்கப்பட்டார். சேலம் மாவட்ட மீனவர் அணி செயலராக இருந்து வந்தார். எடப்பாடி சுரேஷ் நீக்கப்பட்ட அறிவிப்பை ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் வெளியிட்டிருந்தனர்.

வக்கீல் நோட்டீஸ்
இப்போது எடப்பாடி சுரேஷ் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். அதிமுகவில் இருந்து தொண்டர்களை நீக்குவதற்கு கட்சியின் பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது என்பதுதான் கட்சி விதி; அதனால் தம்மை அதிமுகவில் இருந்து நீக்குவதற்கு ஓ.. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் உரிமை இல்லை. தம்மை கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என்று இப்போது வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிட்டார்.

வழக்கு போடுவோம் என வார்னிங்
அத்துடன் தம்மை நீக்கிய அறிவிப்பை 15 நாட்களுக்குள் திரும்பப் பெறாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் எனவும் எச்சரித்துள்ளார். எடப்பாடி சுரேஷ். ஏற்கனவே தம்மை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
Recommended Video

சசிகலாவின் புதிய ஆயுதம்?
இந்த நிலையில் தமது நீக்கப்பட்ட ஆதரவாளர்கள் மூலம் அடுத்தடுத்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்பதுதான் சசிகலா தரப்பின் திட்டமாம். இனிவரும் நாட்களில் அதுதான் நடக்கப் போகின்றனர் சசிகலா அணி சீனியர் பிரமுகர்கள்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications