"சின்னபொண்ணுதான் வெட்கப்படுது".. சீறிய பேருந்து! அடுத்து நடந்த கொடூரம்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

Subscribe to Oneindia Tamil

சேலம்: எடப்பாடி அருகே தனியார் பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் நேற்று மாலை நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 30ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

Recommended Video

    தனியார் பேருந்தும், கல்லூரி பேருந்தும் மோதிக்கொண்ட பதைபதைக்கும் CCTV காட்சி.

    இந்த விபத்துக் குறித்து சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து 30ற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சங்ககிரியை நோக்கி கோழிப்பண்ணை அருகே நேற்று மாலை சென்றது.

    தனியார் பேருந்து

    தனியார் பேருந்து

    தனியார் பேருந்து வேகமாக சென்ற நிலையில், அதில் சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது பாடல் ஓடிக்கொண்டு இருந்தது. டிரைவரும் பாடலை கேட்டுவிட்டு மிக வேகமாக பேருந்தை இயக்கினார். பேருந்து வேகமாக சென்ற போது திருச்செங்கோட்டிலிருந்து எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராதவிதமாக தனியார் பேருந்து மீது மோதியது. எதிரே வந்த பேருந்து தவறான சைடில் வந்தது. கல்லூரி பேருந்து ஏறி வருவதை பார்த்த தனியார் பேருந்து டிரைவர் பேருந்தை உடனே திருப்பி விபத்தை தவிர்க்க முயன்றார்.

    விபத்து

    விபத்து

    ஆனால் அவர் பேருந்தை திருப்பும் முன் எதிரே வேகமாக வந்த கல்லூரி பேருந்து திடீரென தனியார் பேருந்தில் மோதியது. நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி இரண்டு பேருந்துகளும் புளிய மரத்தில் மோதி சாய்ந்து நின்றது. அப்போது தனியார் பேருந்தின் ஓட்டுனர் அருணாச்சலம் பேருந்து எஞ்சின் மேல் தூக்கி வீசப்பட்டார். அவர் தலையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்து இருக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

    காயம்

    காயம்

    அதேபோல் அம்மா.. ஐயோ.. ஆ என்று பயணிகள் அலரும் சத்தமும் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன் பக்கத்தில் இருந்த பயணிகள் இந்த விபத்தில் மோசமாக காயம் அடைந்தனர். இவர்கள் இரண்டு பேருந்துகளிலும் படுகாயம் அடைந்தவர்கள் எடப்பாடி, சங்ககிரி, மற்றும் சேலம், உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தலையில் அடி

    தலையில் அடி

    டிரைவர் உட்பட பலருக்கு இதில் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள்தான் பயனிகளை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனியார் பேருந்தும் தனியார் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துகள் குறித்து கொங்கணாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+