சேலம் சிறுமி பலாத்காரம் செய்து கொலை.. பாமக நிர்வாகி உள்பட 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
Recommended Video

சேலம்: சேலத்தில் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் பாமக நிர்வாகி உள்பட 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சென்றாயம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் பரமசிவம், பழனியம்மாள் தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருந்தனர்.
இவர்களது மூத்த மகள் பூங்கொடி. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி வழக்கம் போல் இரவு சாப்பிட்டுவிட்டு உறங்கிக் கொண்டிருந்தனர்.

மது அருந்துதல்
அப்போது இரவு 11 மணிக்கு அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் பாமக நிர்வாகி பூபதி (40), சினேக்பாபு என்கிற ஆனந்தபாபு, ஆனந்தன், பாலகிருஷ்ணன், பிரபாகரன் ஆகியோர் மது அருந்தி விட்டு கதவு இல்லாத பரமசிவத்தின் வீட்டுக்கு வந்தனர்.

5 பேரும் பலாத்காரம்
அங்கு தூங்கிக் கொண்டிருந்த பூங்கொடியின் வாயை பொத்தி இரு சக்கர வாகனத்தில் காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கு வாங்கி வைத்திருந்த மதுவை மீண்டும் குடித்து விட்டு அழுது கொண்டிருந்த சிறுமியை 5 பேரும் பலாத்காரம் செய்தனர்.

நரபலி நாடகம்
இதை தாளமுடியாமல் சிறுமி துடிதுடித்து இறந்தார். இதை கூட தெரியாமல் இந்த காமுகன்கள் அந்த சிறுமியை பலாத்காரம் செய்தனர். பின்னர் உடல் முழுவதும் மஞ்சள், விபூதியை பூசி மரத்தில் தொங்கவைத்துவிட்டு நரபலி நாடகம் ஆடியுள்ளனர்.

மிரட்டல்
இதையடுத்து 5 பேரும் கிராமத்தினரும் ஒரே சமூகம் என்பதால் பரமசிவத்தை ஊரைவிட்டு விரட்டினர். இதையடுத்து அவர் வேறு ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். வழக்கில் சாட்சி சொல்லக் கூடாது என அவரை 5 பேரும் சேர்ந்து மிரட்டி வந்தனர்.

தீர்ப்பு
இதையடுத்து இந்த சம்பவத்தை விசாரித்த காவல் துறை 5 பேரையும் விசாரணை செய்து அவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு நேற்று சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி விஜயகுமாரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி 5 பேர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் பாமக நிர்வாகி உள்பட 5 பேருக்கும் இரட்டை ஆயுள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications