Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கு.. பேராசிரியர்கள் ஜெயராமன் உள்பட 5 பேர் போலீசில் ஆஜர்

Subscribe to Oneindia Tamil

சேலம்: பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் பதிவாளர் பொறுப்பில் உள்ள பேராசிரியர் விஸ்வநாத மூர்த்தி உள்பட 5 பேர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் பேராசிரியர்கள் ஜெயராமன், சுப்பிரமணிய பாரதி உள்பட 5 பேர் கருப்பூர் போலீஸ் நிலையத்தில் ஆஜர் ஆகி உள்ளனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜெகநாதன். இந்த நிலையில் இவர் மீது உரிய அனுமதி இன்றி நிறுவனம் தொடங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகராக இருந்த இளங்கோவன் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல், கணினி அறிவியல் துறை இணை பேராசிரியர் சதீஷ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்வியியல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோரின் பெயர்கள் புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Salem Periyar University professors Jayaraman and Subramania Bharti appear before Police

இதையடுத்து, துணைவேந்தர் ஜெகநாதன் உள்பட 4 பேர் மீது மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், கூட்டு சதி, அரசு ஊழியராக இருந்து கொண்டு ஏமாற்றுதல் உள்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சேலம் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஜெகநாதனுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. தொடர்ந்து அவர் மருத்துவ சிகிச்சையில் இருந்தார். நேற்று இரவு ஜெகநாதன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

இந்த நிலையில், பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் 5 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பொறுப்பில் உள்ள பேராசிரியர் விஸ்வநாத மூர்த்தி, பதிவாளர் அலுவலகத்தில் பிரிவு அலுவலராக பணியாற்றி வரும் விஷ்ணு மூர்த்தி, அவரது மனைவி வனிதா, பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஜெயராமன் மற்றும் சுப்பிரமணிய பாரதி ஆகிய 5 பேருக்கும் இன்று ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஜெயராமன் மற்றும் சுப்பிரமணிய பாரதி உள்பட 5 பேர் கருப்பூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகினர். 10.30 மணிக்கு ஆஜர் ஆகும் படி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் மேலும் முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என போலீசார் நம்புகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+