பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கு.. பேராசிரியர்கள் ஜெயராமன் உள்பட 5 பேர் போலீசில் ஆஜர்
சேலம்: பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் பதிவாளர் பொறுப்பில் உள்ள பேராசிரியர் விஸ்வநாத மூர்த்தி உள்பட 5 பேர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் பேராசிரியர்கள் ஜெயராமன், சுப்பிரமணிய பாரதி உள்பட 5 பேர் கருப்பூர் போலீஸ் நிலையத்தில் ஆஜர் ஆகி உள்ளனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜெகநாதன். இந்த நிலையில் இவர் மீது உரிய அனுமதி இன்றி நிறுவனம் தொடங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகராக இருந்த இளங்கோவன் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல், கணினி அறிவியல் துறை இணை பேராசிரியர் சதீஷ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்வியியல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோரின் பெயர்கள் புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து, துணைவேந்தர் ஜெகநாதன் உள்பட 4 பேர் மீது மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், கூட்டு சதி, அரசு ஊழியராக இருந்து கொண்டு ஏமாற்றுதல் உள்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சேலம் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஜெகநாதனுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. தொடர்ந்து அவர் மருத்துவ சிகிச்சையில் இருந்தார். நேற்று இரவு ஜெகநாதன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
இந்த நிலையில், பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் 5 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பொறுப்பில் உள்ள பேராசிரியர் விஸ்வநாத மூர்த்தி, பதிவாளர் அலுவலகத்தில் பிரிவு அலுவலராக பணியாற்றி வரும் விஷ்ணு மூர்த்தி, அவரது மனைவி வனிதா, பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஜெயராமன் மற்றும் சுப்பிரமணிய பாரதி ஆகிய 5 பேருக்கும் இன்று ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஜெயராமன் மற்றும் சுப்பிரமணிய பாரதி உள்பட 5 பேர் கருப்பூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகினர். 10.30 மணிக்கு ஆஜர் ஆகும் படி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் மேலும் முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என போலீசார் நம்புகின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications