அடுத்த அதிரடி.. பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் 5 பேருக்கு சம்மன்.. தீவிரமாகும் விசாரணை
சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக துணை வேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் தான் விசாரணைக்கு ஆஜராகும்படி பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் உள்பட 5 பேருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன். இவர், பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தை தொடங்கி விதிகளை மீறி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகராக இருந்த இளங்கோவன் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல், கணினி அறிவியல் துறை இணை பேராசிரியர் சதீஷ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்வியியல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோரின் பெயர்கள் புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும் இந்த பவுண்டேஷன் மூலம் அரசுப் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, துணைவேந்தர் ஜெகநாதன் உள்பட 4 பேர் மீது கூட்டு சதி, மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், அரசு ஊழியராக இருந்து கொண்டு ஏமாற்றுதல் உள்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் தான் வழக்கு தொடர்பாக கருப்பூர் போலீசார் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் உள்பட 5 பேர் நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக்கூறி சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பில் உள்ள பேராசிரியர் விஸ்வநாத மூர்த்தி, பேராசிரியர்கள் ஜெயராமன், சுப்பிரமணிய பாரதி உள்பட 5 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் நாளை காலை 10.30 மணிக்கு போலீஸ் முன்பு ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் மேலும் முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என போலீசார் நம்புகின்றனர். இதனால் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கு புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications