கடன் பிரச்சினை! மனைவி, மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்த சேலம் வெள்ளி பட்டறை அதிபர்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் கடன் பிரச்சினை காரணமாக தனது பெண் குழந்தையுடன் தம்பதி உள்பட மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அரிசிபாளையம் முத்தையா தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். நீண்ட காலமாக வெள்ளி தொழில் செய்து வரும் அருள் புதிதாக வீடு கட்டி அதில் குடியேறியுள்ளார். பல லட்சம் கடன் பெற்று புதிய வீடு கட்டிய பால்ராஜ் அதில் ஒரு பகுதியாக வெள்ளி பட்டறையும் வைத்து தொழில் புரிந்து வந்தார்.

crime

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வீட்டுக் கடனை கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார். இதனிடையே வெள்ளி கொலுசு தயாரிப்பில் பல லட்ச ரூபாய் முதலீடு செய்து அதை திரட்ட முடியாமல் இருந்துள்ளார்.

இதனால் மனம் உடைந்த வெள்ளி பட்டறை தொழிலதிபர் பால்ராஜ், அவரது மனைவி ரேகா, மகள் ஜனனி ஆகிய மூவரும் நேற்று இரவு வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

நீண்ட நேரம் ஆகியும் யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது குடும்பத்துடன் அருள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்

நிகழ்விடம் சென்ற காவல்துறையினர் மூன்று சடலங்களையும் கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிலதிபர் பால்ராஜை யாரேனும் மிரட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+