ஆபாச படங்களை வெளியிடுவேன்.. மிரட்டிய காதலன்.. உயிரை மாய்த்து கொண்ட ஆசிரியை!
பள்ளி ஆசிரியை தற்கொலை செய்துகொண்டார்
Recommended Video
சேலம்: ஆபாச படங்களை வெளியிடுவேன் என்று காதலன் மிரட்டியதால் ஆசிரியை தற்கொலை செய்துகொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே மலையாண்டஅள்ளியை சேர்ந்தவர் பிரீத்தா. இவர் ஒரு கூலித் தொழிலாளியின் மகள்.

22 வயதான ப்ரீத்தா பிஎட் பட்டதாரி, அதனால் பக்கத்தில் இருந்த ஒரு தனியார் ஸ்கூலில் டீச்சராக வேலை பார்த்து வந்தார்.
இவர் அதே பகுதியை சேர்ந்த பிரபு செல்வம் என்பவரை 5 வருஷமாக காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் வீட்டுக்கு தெரியவும், வீட்டில் கூப்பிட்டு கண்டித்துள்ளனர். ஆனாலும் ப்ரீத்தா தன் காதலை விடவேயில்லை.
ஒருகட்டத்தில், பிரவு செல்வத்திடம் தன்னை கல்யாணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். அதற்கு பிரபுசெல்வம் 10 ஆயிரம் ரூபாய் கொடு, கல்யாணம் செய்துக்கறேன் என்று சொல்லி பணத்தை பலமுறை வாங்கி இருக்கிறார்.
போன வாரம் 2ம் தேதியும், பிரீத்தா, பிரபுசெல்வத்திடம் கல்யாணம் செய்துக்கொள்ள கேட்டதற்கு மறுபடியும் அவர் பணம் கேட்க, இதற்கு ப்ரீத்தா மறுப்பு சொல்ல...இருவருக்குள்ளும் தகராறு ஆரம்பமானது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பிரபுசெல்வம், பணம் தரலேன்னா, நாம நெருக்கமாக இருக்கும்போது எடுத்துக்கிட்ட எல்லா போட்டோக்களையும் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டி உள்ளார். அதிர்ச்சி அடைந்த பிரீத்தா அன்று இரவே மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை தண்ணீர் ஊற்றி காப்பாற்றி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவ்வளவு நாள் தீவிர சிகிச்சையில் இருந்தவர் தற்போது உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் பற்றி மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு செல்வத்தை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications