சேலத்தில் பயங்கரம்.. அரசு பள்ளியில் வைத்தே ஆசிரியர் வெட்டிக்கொலை.. பதற வைத்த சம்பவம்! என்ன நடந்தது?
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசு பள்ளியில் வைத்தே ஆசிரியை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக கணவரே பள்ளியில் புகுந்து ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றியதில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியை வெட்டி படுகொலை செய்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கமலாபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியில் ஆசிரியையாக ஸ்ரீவித்யா என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் விஜயமுருகன். திருமணம் ஆனாலும் குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் வழக்கம்போல் இன்று ஸ்ரீவித்யா பள்ளிக்கு காலையில் வந்தார். அப்போது அவரது கணவர் விஜயமுருகன் பள்ளிக்கு வந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கணவர் மனைவி இடையே கடும் வாக்குவாதம் நடந்த நிலையில் திடீரென ஆத்திரமடைந்த கணவர் ஸ்ரீவித்யாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த ஸ்ரீவித்யா ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார்.
இதையடுத்து விஜயமுருகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஸ்ரீவித்யாவை பள்ளி ஊழியர்கள், ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதையடுத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அங்கிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு பள்ளியில் புகுந்து ஆசிரியையை வெட்டி கொன்ற விஜயமுருகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications