கவலைப்படாதீங்க.. உங்க நிலத்தை பிடுங்கி 8 வழிச்சாலை அமைக்கமாட்டோம்.. முதல்வர் உறுதி!
சேலம்: மக்களின் நிலத்தை பிடுங்கி எட்டு வழிச்சாலை அமைக்கப்படாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் 320 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 2 அடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியின் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக ராமகிருஷ்ணா சாலை முதல் அழகாபுரம் காவல் நிலையம், ஏவிஆர் ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சாலை வரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார்.

திமுகவினர் பங்கேற்பு
முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேம்பாலம் திறப்பு நிகழ்ச்சியில் உரையாற்றினார். இதில் அதிமுகவினர் மட்டுமின்றி திமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களும் பங்கேற்றனர்.

தனிநபர் வசதிக்காக அல்ல
அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களின் உயிரை காக்கவே சாலை திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன என்றார். மக்களின் வசதிக்காகவே 8 வழிச்சாலை திட்டம் அமைக்கப்படுகிறதே தவிர தனிநபரின் வசதிக்காக அல்ல என்றும் அவர் கூறினார்.

நிலங்களை பறிக்க மாட்டோம்
சேலம் அருகே 60 ஏக்கர் பரப்பளவில் பஸ் போர்ட் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் மக்களிடம் இருந்து நிலங்களை பிடுங்கி 8 வழிச்சாலை திட்டத்தை திணிக்க மாட்டோம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

திமுக, அதிமுகவினர் முழக்கம்
நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்று பேசியபோது, திமுகவினர் ஆர்ப்பரித்து முழக்கமிட்டனர். இதேபோல் ஜெயலலிதா பெயரை குறிப்பிட்ட போது அதிமுகவினரும் முழக்கமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications