என்னா கொழுப்பு பாருங்க.. மேல் பர்த்திலிருந்து நைஸா இறங்கி வந்து தூங்கிய பெண்ணிடம் சில்மிஷம்!

ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்தவர் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

சேலம்: ரயில் பெர்த்-ல் இருந்தவர், கீழே இறங்கி வந்து... படுக்கையில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷ வேலையை காட்டினார். இதையடுத்து, இப்போது ஜெயிலில் கம்பி எண்ணி வருகிறார்.

சென்னை - ஆலப்புழா எக்ஸ்பிரஸ்-ல் நேற்று முன்தினம் இரவு ஒரு பெண் தன்னுடைய அம்மாவுடன் பயணம் செய்தார். கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் இந்த பெண். வயசு 24 ஆகிறது. ரிசவர்வேஷன் செய்திருந்ததால், கீழ்படுக்கையில் இந்த பெண் படுத்து தூங்கி கொண்டு வந்தார்.

Youth arrested for woman molestation in Train

பர்த்-ல் படுத்து கொண்டிருந்த ஒரு இளைஞர் இந்த பெண்ணை ரொம்ப நேரமாக பார்த்து கொண்டே இருந்தார். சேலம் அருகே ரயில் வந்தபோது, கீழே இறங்கி வந்து, இளம்பெண்ணிடம் சில்மிஷத்திலும், சீண்டலிலும் ஈடுபட்டுள்ளார்.

இதனால் தூங்கி கொண்டிருந்த அந்த பெண், பதறி அடித்து கொண்டு எழுந்து கத்தி கூச்சல் போட்டார். இதனால் அந்த கம்பார்ட்மென்ட்டில் இருந்தவர்கள் எல்லோருமே திரண்டு வந்து இளைஞரை மடக்கி பிடித்து சேலம் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ரெயில்வே போலீசில் அந்த இளம்பெண் புகார் கொடுக்கவும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த இளைஞர் திருத்தணியை சேர்ந்த 30 வயதுடைய பிரவீன்குமார் என்பதும், எர்ணாகுளத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்க்கிறார் என்பதும், தெரியவந்தது.

பெண்ணிடம் சீண்டலில் ஈடுபட்டபோது குடிபோதையிலும் இருந்திருக்கிறார். இதையடுத்து, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் பிரவீன்குமாரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+