சிக்கியது ஆடியோ.. பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த பாஜக அமைச்சர்.. பதவி ராஜினாமா.. கோவாவில் பரபரப்பு
கோவா பாஜக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்
கோவா: பாலியல் புகாரில் சிக்கிய பாஜக அமைச்சர் ஒருவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருப்பது கோவாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கோவாவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாலியல் புகாரில் சிக்கிய பாஜக அமைச்சர் ஒருவர் பதவி விலகியிருப்பது அக்கட்சிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
மிலிந்த் நாயக் ஒரு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.. தன்னுடைய அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி அந்த பெண்ணுக்கு டார்ச்சர் தந்ததாக கூறப்பட்டது..

துஷ்பிரயோகம்
கடந்த நவம்பர் 30ம் தேதி, ஆளும் பாஜக அமைச்சர் இந்த பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், 15 நாட்களில் பாஜக அவரை அமைச்சரவையில் இருந்து நீக்காவிட்டால் அந்த அமைச்சரின் பெயரை வெளியிடுவோம் என்றும் கூறியிருந்தது.. இது கோவா அரசியலில் பெரும் புயலை வீசியது.. ஆனால், கோவா மாநில பாஜகவோ எதை பற்றியுமே கவலைப்படவில்லை..

சவால்
அம்மாநில பாஜக தலைவர், முடிந்தால் அந்த அமைச்சரின் பெயரை வெளியிடுங்கள் பார்க்கலாம், அப்படி காங்கிரஸ் கட்சி பெயரை வெளியிட்டால் அந்த அமைச்சர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் சவால் விடுத்திருந்தது. தற்போது சவால் விடுத்து 15 நாட்கள் அவகாசம் முடிவடைந்துவிட்டதால், பாஜகவின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மிலிந்த் நாயக்தான் அந்த அமைச்சர் என்றும், அவர் தன்னுடைய அமைச்சர் பதவியை பயன்படுத்தி பீகாரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் டார்ச்சர் தந்ததாகவும் வெளிப்படையாக காங்கிரஸ் கூறியுள்ளது..

பெண்
இப்படி ஒரு புகாரை சொன்னது, கோவா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிரிஷ் சோடங்கர் என்பவர்தான். அமைச்சருக்கும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் இடையே நடந்த வாட்ஸ்அப் மெசேஜ்களையும் ஸ்க்ரீன்ஷாட்களை வெளியிட்டுள்ளார்.. அத்துடன், அமைச்சரும் அந்த பெண்ணும் போனில் பேசிய ஆடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.. அத்துடன் இந்த ஆதாரங்கள் அத்தனையையும் கொண்டுபோய், போலீசில் புகாராகவும் தந்தது காங்கிரஸ்.. இதை பாஜக கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை..

ராஜினாமா
காங்கிரஸ் இப்படி பெயரை வெளியிட்ட கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மிலிந்த் நாயக் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.. இந்த வழக்கில் சுதந்திரமான, நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்று சொல்லி அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். எனினும் உண்மையிலேயே அதற்காகத்தான் ராஜினாமா செய்தாரா? அல்லது பெயர் வெளிவந்துவிட்டதால் ராஜினாமா செய்தாரா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன..

பிரச்சாரம்
அதேசமயம், ஆளும் பாஜகவுக்கு இது மிகுந்த பின்னடைவு தரும் விஷயமாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கோவாவில் காங்கிரஸ் சரிவை நோக்கி செல்லும்நிலையில், மம்தா பானர்ஜி கோவாவுக்கு குறி வைத்து வரும் நிலையில், பாஜகவுக்கு இந்த சம்பவம் இழுக்கை தேடி தந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமல்ல, விரைவில் சட்டமன்றத் தேர்தல் கோவாவில் நடைபெறவுள்ள நிலையில், இந்த பிரச்சனையை பிரச்சாரத்தின்போது, நிச்சயம் காங்கிரஸ் கையில் எடுக்கும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications