சிங்கப்பூர் தேசிய தினத்தில் பொதுப்பணிச் சிறப்புப் பதக்கம் பெற்ற தமிழருக்கு அய்மான் சங்கம் வாழ்த்து
சிங்கப்பூர் : சிங்கப்பூர் தேசிய தினம் அன்று பொதுப்பணிச் சிறப்புப் பதக்கம் பெற்ற தமிழருக்கு அய்மான் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது,

இது தொடர்பான செய்தி குறிப்பில், "நேற்று 09/08/2021 சிங்கப்பூர் 56வது தேசிய தின நாளில் முன்னிட்டு பொதுப்பணிச் சிறப்புப் பதக்க விருதினைப் பெற்றுள்ள தமிழ் ஆர்வலர், இன நல்லிணக்க மாமனிதர், நாகூரைப் பூர்வீகமாகக் கொண்ட ஜமாலியன் ஹாஜா நிஜாமுதீன் அவர்களுக்கு அபுதாபி அய்மான் சங்கத்தின் தலைவர் ஹெச் எம் கீழக்கரை முஹம்மது ஜமாலுதீன் அறிவுறுத்தலின்படி நேற்று 09/08/2021 அய்மான் சங்கத்தின் நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

மென் மேலும் வரும் காலங்களில் பல பதக்கங்களை பெற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்திட அய்மான் சங்கத்தின் அனைத்து நிர்வாகியின் சார்பாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications