வேலைவாய்ப்புகளில் வெளிநாட்டினருக்கான கதவுகளை அடைத்துவிட மாட்டோம்: சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்
சிங்கப்பூர்: கொரோனா காலத்துக்குப் பின்னர் வேலைவாய்ப்புகளில் வெளிநாட்டினருக்கான கதவுகளை நாங்கள் முற்றிலும் அடைத்துவிடமாட்டோம் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் கூறியுள்ளார்.
கொரோனா பரவலை சிங்கப்பூர் ஓரளவு கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது. கொரோனா கால நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் லீ சியான் லூங் கூறியதாவது:

தொடக்க நிலை நிலவரம்
தொடக்கத்தில் கொரோனா நோயாளிகளுக்கு எந்தவிதமான தொற்றும் இல்லாமல் இருந்தது. வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்பட்ட அத்தனை சிங்கப்பூர் நாட்டவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். ஒருகுறிப்பிட்ட நாடுகளில் இருந்து மட்டும் வந்தவர்கள் என்று நாம் பார்க்கவில்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தனிமைப்படுத்துதல் முகாம்களில் இருந்து அவர்கள் வெளியேற்றப்படும் முன்னர் சோதனைக்குள்ளாக்கப்பட்டனர். அதேபோல் முக கவசத்தின் பயன்பாட்டையும் அரசாங்கம் முன்கூட்டியே வலியுறுத்தியது. வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கியிருந்த இடங்களில் இருந்து கொரோனா அதிவேகமாக பரவுவதைத் தடுப்பதில் அதிகாரிகள் விரைவாக செயல்பட்டனர். வெளிநாட்டுத் தொழிலாளர்களின் தங்கும் இடங்கள் மிக நெருக்கமானதாக இருந்ததால் கொரோனா பரவும் அபாயம் உணரப்பட்டது. ஆகையால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சிங்கப்பூர் அரசு மேற்கொண்டது.

தவறுகளில் இருந்து பாடங்கள்
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் நடவடிக்கைகளில் நாங்கள் தவறுகளை செய்திருக்கலாம். இந்த தவறுகளில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்கிறோம். இனியொரு முறை இத்தகைய தவறுகள் நிகழாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதுபோன்ற அவசரமான காலங்களில் மிகச் சரியான முடிவுகளை எடுத்துவிடவும் முடியாது. எந்த ஒருமுடிவுக்காகவும் காத்திருக்கவும் முடியாது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவெடுத்து இயங்கவேண்டியதுதான். இவ்வாறு பிரதமர் லீ சியான் லூங் பதிலளித்தார்.

கதவை அடைக்க மாட்டோம்
இதனிடையே சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய லீ சியான் லூங், வேலைவாய்ப்புகளில் வெளிநாட்டினருக்கான கதவுகளை நாம் முற்றிலும் சாத்திவிட முடியாது. சிங்கப்பூர் நாட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்தாலும் ஆற்றல்மிக்க வெளிநாட்டினருக்கான கதவுகளை சிங்கப்பூர் திறந்தே வைத்திருக்கும்; அதன் மூலம் சிங்கப்பூர் நாட்டவருக்கான அதிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications