மரணத்திலும் இணை பிரியாத தம்பதி.. மீனாட்சி ஆச்சி இறந்த 48 மணி நேரத்திற்குள் ஏ.ஆர்.லட்சுமணன் மரணம்..!
சிவகங்கை: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் மனைவி மீனாட்சி ஆச்சி நேற்று முன் தினம் காலமான நிலையில் இன்று அவர் காலமாகியுள்ளார்.
உயிரோடு இருக்கும் வரை மட்டுமல்லாமல் மரணத்திலும் இணை பிரியாத தம்பதியாக மீனாட்சி ஆச்சியும் -ஏ.ஆர்.லட்சுமணனும் திகழ்ந்துள்ளனர்.
மனைவி இறந்த துயரத்தில் இருந்த ஏ.ஆர்.லட்சுமணனுக்கு நேற்று திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மனைவி சென்ற இடத்திற்கே அவரும் சென்றுவிட்டார்.

டெல்லி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை பூர்வீகமாக கொண்டவர் ஏ.ஆர்.லட்சுமணன். வழக்கறிஞராக பணியை தொடங்கிய அவர் படிப்படியாக முன்னேறி உச்சநீதிமன்ற நீதிபதி என்ற உயர்ந்த சிகரத்தை எட்டிப்பிடித்து சரித்திரப் புகழ்வாய்ந்த பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார். கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இவர் பணியாற்றி இருக்கிறார்.

சரித்திரப் புகழ்
பெண்கள் மீது ஆசிட் வீசும் நிகழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடும் தண்டனை அளிப்பதற்கான திருத்தங்களை பரிந்துரைத்தவர். சென்னையில் உச்சநீதிமன்றக் கிளையை அமைக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக, சட்ட ஆணைய அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்து பரிந்துரை செய்தார் ஏ.ஆர்.லட்சுமணன். பதினெட்டாவது இந்தியச் சட்ட ஆணையத்தின் தலைவராக இருந்த போது 'சட்டக் கமிஷன் அறிக்கைகளை' மத்திய அரசுக்கு அளித்த ஒரே ஆணையத் தலைவர் என்ற பெருமையை பெற்றவர் ஏ.ஆர்.லட்சுமணன்.

முல்லைப் பெரியாறு
மேலும், பெண்களுக்குச் சம சொத்துரிமை வழங்கும் இந்து வாரிசுரிமைச் சட்டத்திலும், இந்திய வாரிசுரிமைச் சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டு வரப் பரிந்துரைகள் செய்தவர் ஏ.ஆர். லட்சுமணன். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் நதி நீர் உரிமைகளை நிலை நாட்ட நெஞ்சுயர்த்தி குரல் கொடுத்தவர் ஏ.ஆர். லட்சுமணன். உச்சநீதிமன்றத்தின் உயர்ந்த பீடத்தில் இருந்த இவர் சிறந்த தமிழ் மொழி பற்றாளரும் கூட.

வற்றாத பாசம்
மனைவி மீனாட்சி ஆச்சி மீது வற்றாத பாசம் வைத்திருந்த முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், நேற்று முன் தினம் மீனாட்சி ஆச்சி மறைந்ததை அடுத்து மிகுந்த துயரத்தில் இருந்திருக்கிறார். மனைவியின் எதிர்பாராத மரணத்தை ஜீரணிக்க முடியாமல் இருந்த இவருக்கு நேற்று திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்த நிகழ்வு மரணத்திலும் இணை பிரியாத தம்பதி என்பதை இங்கு சுட்டிக்காட்டுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications