சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காரைக்குடியில் குடும்பத்தோடு வந்து வாக்களித்த எச்.ராஜா

பிரதமராக மீண்டும் நரேந்திர மோடியே வருவார் என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    வாக்குச்சாவடியில் வாக்களித்தபின் எச். ராஜா பேட்டி-வீடியோ

    சிவகங்கை: வெள்ளை நிற பளிச் டிரஸ், நெற்றியில் குங்குமம் என வழக்கமான ஸ்டைலில் குடும்பத்தோடு வந்து காரைக்குடியில் ஓட்டு போட்டுவிட்டு போனார் எச்.ராஜா!

    4 நாளைக்கு முன்னாடியே பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில் சிவகங்கை தொகுதி மக்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்று சொல்லி தந்தார்.

    BJP National Secretary H Raja casts his vote in Karaikudi

    "18-ந் தேதி.. வாக்கு இயந்திரத்தில் 3-வதாக தாமரை சின்னம் இருக்கும்.. அதுக்கு நேரா இருக்கிற பட்டனை அழுத்தி.. என்னை வெற்றி பெற செய்யுங்க" என்று டெமோ காட்டி எச்.ராஜா ஒரு பாடமே நடத்தி இருந்தார்.

    'தலையெழுத்து' தேர்தலில் வாக்களித்த தலைவர்கள்.. 'ஆயுத எழுத்தாக' ஆர்வமுடன் செல்லும் மக்கள் 'தலையெழுத்து' தேர்தலில் வாக்களித்த தலைவர்கள்.. 'ஆயுத எழுத்தாக' ஆர்வமுடன் செல்லும் மக்கள்

    இதற்கு சிவகங்கை தொகுதி மக்களே நிறைய ஆதரவு, எதிர்ப்புமாக கமெண்ட்களை போட்டிருந்தனர். இந்நிலையில், இன்று காலை எச்.ராஜா காரைக்குடியில் குடும்பத்தினருடன் வந்து வாக்கினை பதிவு செய்தார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் "கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிட இந்தத் தேர்தலில் பாஜக அதிகப் பெரும்பான்மையில் வெற்றி பெறும். மீண்டும் நரேந்திர மோடி ஆட்சி புரிவார். இந்த தேர்தல் ஜனநாயக தேர்தல் ஜனநாயகம் வெல்லும். மீண்டும் பாஜக ஆட்சி புரியும்" என்று சொல்லி விட்டு சென்றார்.

    English summary
    BJP National Secretary H Raja casts his vote in Sivagangai and says Modi will come again as PM
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X