கீழடியில் கிடைத்த பொக்கிஷம்! அகழாய்வில் வித்தியாசமான சுடுமண் பானை கண்டெடுப்பு!

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருட்கள் கீழடியில் கிடைக்கப்பெற்று வரும் நிலையில், 11-வது கட்ட அகழாய்வில் புதிய சுடுமண் பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கீழடியில் இது போன்ற பானை கண்டெடுக்கப்பட்டதில்லை.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடி அகழாய்வு களத்தின் தொல்லியல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன் மற்றும் அவரது குழுவினரின் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் மூலம் அங்கு நகர நாகரிகம் இருந்ததற்கான முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்தனர்.

Keezhadi excavation

பின்னர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாம் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்தது. தொடர்ந்து அடுத்த கட்ட அகழாய்வை நடத்திய ஸ்ரீராமன், ஏற்கனவே கிடைத்த பொருட்கள் கிடைப்பதாக கூறி அகழாய்வை நிறைவு செய்தார்.

தற்போது கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் மார்ச் 11 ஆம் தேதி முதல் இந்த அகழாய்வு நடைபெற்று வருகிறது. தொல்லியல் துறை இயக்குநர் ரமேஷ் தலைமையில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கீழடி11ம் கட்ட அகழாய்வில் மிகச்சிறிய வித்தியாசமான வடிவிலான குறுகிய வாய் கொண்ட சுடுமண் பானை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை கீழடியில் இது போன்ற பானை கண்டெடுக்கப்பட்டதில்லை. கெண்டி மூக்கு பானை, சிவப்பு நிற மூடியுடன் கூடிய பானை என அடுத்தடுத்து அகழாய்வில் கிடைத்தாலும் தற்போது கிடைத்த பானை அதில் இருந்து புதிய வடிவத்தில் உள்ளதாக கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+