Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டென உடைந்து.. கட்டுக்கடங்காமல் கண்ணீர்விட்ட சீமான்.. உணர்ச்சி வசப்பட்ட சகோதரி.. என்ன நடந்தது?

குடும்ப நிகழ்வுகளில் சீமான் இவ்வளவு உணர்ச்சிகரமாக இருந்து யாரும் பார்த்தது இல்லை.

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென சிவகங்கையில் நிகழ்ச்சி ஒன்றில் கண்ணீர்விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எப்போதும் உணர்ச்சிவசமாக பேச கூடியவர். மேடைகளில் ஆக்ரோஷமாக இவர் கருத்துக்களை வைப்பார்.

இவரை லட்சக்கணக்கில் இளைஞர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். தமிழ்நாட்டிலும் நாம் தமிழர் கட்சிக்கு 6 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்கு வங்கி உள்ளது.

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு

இப்போது ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மேனகா அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் நாம் தமிழர் கட்சி சார்பாக தற்போது பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். கள பிரச்சாரத்தை அவர் மேற்கொண்டு வருகிறார். விரைவில் சீமானும் இந்த பிரச்சாரத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீமானும் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்வார் என்று கூறப்படுகிறது.

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு

கடந்த முறை ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சி 3ம் இடம் பிடித்தது. கடந்த ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு,

நம்பர் 1 - காங்கிரஸ் - திருமகன் ஈவெரா- 67,300 வாக்குகள் - 44.27 வாக்கு சதவிகிதம்
நம்பர் 2- தமிழ் மாநில காங்கிரஸ் - யுவராஜா எம்.- 58,396 வாக்குகள் - 38.41 வாக்கு சதவிகிதம்
நம்பர் 3- நாம் தமிழர் - கோமதி - 11,629 வாக்குகள் - 7.65 வாக்கு சதவிகிதம்
நம்பர் 4- மக்கள் நீதி மய்யம் - ராஜ் குமார் - 10,005 வாக்குகள் - 6.58 வாக்கு சதவிகிதம்

கடந்த தேர்தலில் நாம் தமிழர் - மக்கள் நீதி மய்யம்தான் தேர்தல் முடிவுகளை மாற்றியது. அதனால் இந்த முறை நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகள் அதிக கவனம் பெற்றுள்ளன.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்த நிலையில்தான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென சிவகங்கையில் நிகழ்ச்சி ஒன்றில் கண்ணீர்விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீமான் சகோதரி மகளான கயல்விழிக்கு சிவகங்கையில் நேற்று நிச்சயதார்த்தம் நடத்தது. இந்த நிகழ்ச்சியில் சீமான் கலந்து கொண்டார். மணமகன் - மணமகள் இருவருக்கும் சிவகங்கையில் சீமான் வாழ்த்து தெரிவித்தார். தனது சகோதரி மகளை அணைத்து அன்பாக அவருக்கு வாழ்த்து சொல்லி ஆசி வழங்கினார். இந்த நிகழ்வில் சீமான் தொடக்கத்தில் இருந்தே உணர்ச்சிகரமாக காணப்பட்டார்.

மகள்

மகள்

சீமான் தூக்கி வளர்ந்த பெண்தான் கயல்விழி. தனது மகளை போல அன்பாக கயல்விழியை அவர் வளர்த்து வந்துள்ளார். இதனால் இந்த நிச்சயதார்த்த நிகழ்விலும் சீமான் மிகவும் உணர்ச்சிகரமாக காணப்பட்டார். இந்த நிலையில்தான் மேடையில் நிச்சயதார்த்தம் முடிந்ததும் சீமான் கண்ணீர்விட தொடங்கினார். அப்படியே உடைந்து அழுது கண்ணீர்விட தொடங்கினார். கீழே இருந்த தொண்டர்கள் இதை பார்த்து வியந்தனர். இப்படி எல்லாம் சீமான் கண்ணீர்விட்டு அவர்கள் பார்த்தது இல்லை.

சீமான்

சீமான்

குடும்ப நிகழ்வுகளில் சீமான் இவ்வளவு உணர்ச்சிகரமாக இருந்து யாரும் பார்த்தது இல்லை. கண்ணீரை அடக்க முடியாமல் சீமான் தேம்பிக்கொண்டு இருந்தார். அப்போது அருகே இருந்த சகோதரி அன்பரசியும், உறவினர்களும் சீமானை அரவணைத்து சீமானுக்கு அன்பாக ஆறுதல் கூறினர். சீமான் இப்படி உணர்ச்சிகரமாக இருந்ததும், அவர் கண்ணீர் விட்டதும் மேடையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+