இனிப்புன்னா சாக்லேட்தானா.. தேவகோட்டை பள்ளியில் குடியரசு தினத்தில் கலக்கிய கடலை மிட்டாய்
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்,குடியரசு தின விழாவில் அனைவருக்கும் சாக்லேட் தவிர்த்து சத்தான கடலை மிட்டாய் இனிப்பு வழங்கி அப்பள்ளி வித்தியாசமாக விழாவைக் கொடாடியது.
ஆசிரியை முத்துமீனா, பள்ளியின் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் தமிழ் துறை தலைவர் முனைவர் சபா.அருணாச்சலம் கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்.

குடியரசு தின விழா தொடர்பாக கார்த்திகேயன் பேச்சும், திவ்யஸ்ரீ,ஜெயஸ்ரீ ஆகியோர் குடியரசு தின பாடலையும்,முத்தய்யன் இந்திய உரிமை என்ற தலைப்பில் பேச்சும்,ஆங்கிலத்தில் குடியரசு தினம் தொடர்பாக காயத்ரி,மாதரசி, சஞ்சீவ், மகாலட்சுமி ஆகியோரும் பேசினார்கள்.

மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும் அனைவருக்கும் சாக்லேட் தவிர்த்து கடலை மிட்டாய் இனிப்பு வழங்கப்பட்டது. இப்பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர்களின் பிறந்த நாள்களுக்கு அவர்களே சாக்லேட் தவிர்த்து கடலை அச்சு மிட்டாய் இனிப்பாக வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. ஆசிரியை முத்து லட்சுமி நன்றி கூறினார். விழாவில் பேசிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.














Click it and Unblock the Notifications