போலீஸ் கஸ்டடியில் கொல்லப்பட்ட அஜித் குமார்.. வீட்டிற்கு சென்ற எடப்பாடி.. தாயாரின் கையை பிடித்து ஆறுதல்
சிவகங்கை: சிவகங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த திருப்புவனம் அஜித் குமார் வீட்டிற்கு சென்ற குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது தாய் மற்றும் சகோதரர் நவீன் குமாருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவரது வீட்டில் இருந்த அஜித் குமாரின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து பூக்களை தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக சார்பாக ரூ.5 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்றும் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித் குமார். 29 வயதான இவர் கோயிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றினார். இந்த நிலையில்தான், கடந்த மாதம் நகை திருட்டு வழக்கில் தனிப்படை போலீசார் இவரை அழைத்து சென்று விசாரனை நடத்தியுள்ளனர்.

போலீசார் கொடூரமாக தாக்கியதில் அஜித் குமார் உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த சம்பவம் ஏற்படுத்தியது. போலீசாரின் சட்ட விரோத கஸ்டடியில் இளைஞர் அடித்துகொல்லப்பட்ட வழக்கின் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அஜித்குமார் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 8 ஆம் தேதி நீதிபதியின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை மாநில காவல்துறையிடமிருந்து சிபிஐக்கு மாற்ற முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதன்படி, இரு வாரங்களுக்கு முன்னால் இந்த வழக்கின் விசாரணையை கையில் எடுத்த சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நகை திருட்டு புகார் அளித்த நிகிதாவிடமும் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே, திருப்புவனம் அஜித் குமார் வீட்டிற்கு சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது தாய் மற்றும் சகோதரர் நவீன் குமாருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவரது வீட்டில் இருந்த அஜித் குமாரின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து பூக்களை தூவி மரியாதை செலுத்தினார்.
இதன்பிறகு அதிமுக சார்பாக ரூ.5 லட்சம் நிதி உதவி அளிப்பதாக அந்த குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அதிமுக அரசு அமைந்ததும் நவீன் குமார் விருப்பப்படும் இடத்தில் வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இரண்டாம் கட்டமாக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் தான் சிவகங்கை வந்திருந்த எடப்பாடி பழனிசாமி அஜித் குமார் குடும்பத்திற்கு நேரில் சென்று சந்தித்தார்.
-
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? 26 தொகுதிகளுக்கு வெளியான உத்தேச பட்டியல்! குஷ்பு, அண்ணாமலை மிஸ்ஸிங்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications