4வது போட்டியாக விக்கெட் எடுக்கலையா.. பும்ராவுக்கு வந்த சோதனை.. மும்பை அடிவாங்க இதுதான் காரணம்!
மும்பை: ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 4வது போட்டியாக மும்பை அணியின் நட்சத்திர வீரர் பும்ரா விக்கெட் எடுக்காதது பேசுபொருளாகி இருக்கிறது. பும்ராவை பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையுடன் விளையாடி வருவதால், மும்பை அணியின் மற்ற பவுலர்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து வருகின்றனர். இதுவே மும்பை அணியின் சொதப்பலுக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி பில் சால்ட் மற்றும் ரஜத் பட்டிதார் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்களை குவித்தது.

மும்பை அணி தரப்பில் போல்ட், ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாகூர் மற்றும் சான்ட்னர் ஆகிய 4 பவுலர்களும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். நட்சத்திர வீரர் பும்ரா ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியவில்லை. 4 ஓவர்களை வீசிய பும்ரா 35 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். எகனாமிக்களாக பவுலிங் செய்திருந்தாலும், அவர் தொடர்ச்சியாக 4 போட்டிகளிலும் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை.
இந்தப் போட்டியில் பும்ரா பவர் பிளேவில் 2 ஓவர்களை வீசினார். இந்த 2 ஓவர்களில் வெறும் 16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன்பின் 17 மற்றும் 19 ஆகிய ஓவர்களை பும்ரா வீசினார். அந்த 2 ஓவர்களிலும் விக்கெட் கிடைக்கவில்லை. பும்ரா விக்கெட் வீழ்த்தாதது மற்ற மும்பை பவுலர்களுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. ஏனென்றால் பும்ராவை பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையுடன் ஆடி வருகின்றனர்.
இது தொடர்கதையாக மாறியுள்ளது. பும்ராவை எச்சரிக்கையுடன் விளையாடுவதால், மற்ற பவுலர்களிடம் தேவையான அதிரடியை வெளிப்படுத்த முடிகிறது. பும்ரா உருவாக்கும் அழுத்தத்தை அடுத்த சில ஓவர்களில் மற்ற பவுலர்களால் தக்க வைக்க முடியவில்லை. இதனால் மும்பை அணியின் பவுலிங் அட்டாக்கை பேட்ஸ்மேன்கள் எளிதாக துவம்சம் செய்துவிடுகிறார்கள்.
இதனால் பும்ராவுக்கு இது சோதனை காலமாக அமைந்திருக்கிறது. இதனால் பும்ரா இப்படியான சிக்கலில் இருந்து எப்படி வெளிவருவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதனை மும்பை அணியின் பவுலிங் கோச்சான லசித் மலிங்காவும் உணர்ந்தே இருக்கிறார். இதனால் பும்ரா விரைவில் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வைபவ் சூர்யவன்ஷிக்கு கொடுத்த மரியாதை.. சீனியராக உயர்ந்துவிட்ட விராட் கோலி.. என்ன நடந்தது? -
நீதான்யா சூப்பர்ஸ்டார்.. சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி.. 3 தரமான அணிகளுடன் சம்பவம் செய்த சுட்டிப்பையன்! -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு!












Click it and Unblock the Notifications