IND vs NZ: ரோஹித் சர்மாவுக்கு மட்டுமல்ல.. அந்த வீரருக்கும் கடைசி போட்டி இதுதான்? சோகமான ரசிகர்கள்!
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் கடைசி ஒருநாள் போட்டியாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் வீரரான கேன் வில்லியம்சனுக்கும் இதுவே கடைசி ஆட்டமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று துபாயில் நடக்கவுள்ளது. 2000ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடின. அந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றியை பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இதனால் எந்த அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் இன்னொரு பக்கம் இருநாட்டு ரசிகர்களும் சோகத்தில் இருக்கின்றனர். ஏனென்றால் இந்த ஆட்டம் 2 முக்கிய வீரர்களுக்கு கடைசி போட்டியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதில் முதல் வீரர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தான். ஏற்கனவே கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை வெற்றியுடன், டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். ரெட் பால் கிரிக்கெட்டில் விளையாட ரோஹித் சர்மாவின் ஃபிட்னஸ் அனுமதிக்காத நிலையில், ஃபார்மிலும் இல்லாமல் திணறி வருகிறார். ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் போதே பும்ராவுக்கு கேப்டன்சியை விட்டுக் கொடுத்தார்.
இதனால் இனி ரோஹித் சர்மா ரெட் பால் கிரிக்கெட் பக்கம் வருவது சந்தேகம்தான். இந்த நிலையில் 38 வயதாகும் ரோஹித் சர்மா சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட இருப்பதால், வென்றாலும் தோல்வியடைந்தாலும் இதன்பின் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே பிசிசிஐ தரப்பில் அவருடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளது.
அதேபோல் நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் வீரரான கேன் வில்லியம்சனுக்கு இதுவே கடைசி ஒருநாள் போட்டியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நியூசிலாந்து அணியின் ஒப்பந்தத்தை நிராகரித்த கேன் வில்லியம்சன், ரெட் பால் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். டி20 உலகக்கோப்பைக்கு பின் கேப்டன்சியில் இருந்து விலகி கொண்டார்.
இதனால் ஒயிட் பால் கிரிக்கெட்டில் இதுவே அவரின் கடைசி ஆட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இந்தப் போட்டியின் இறுதியில் அதிர்ச்சி காத்திருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் அவர்களது ரசிகர்களும் ஃபேர்வெல் கொடுக்க தயாராகி வருகின்றனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications