அந்த ஒரு முடிவு.. ஹர்திக் பாண்டியாவை பின்பற்றுவாரா ருதுராஜ் கெய்க்வாட்.. சிஎஸ்கேவுக்கு ஆப்பு உறுதி!
சென்னை: மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்ற முதல் சீசனிலேயே சீனியர் வீரரான ரோஹித் சர்மாவை இம்பேக்ட் பிளேயராக விளையாட வைத்து மிகப்பெரிய முடிவு ஒன்றை எடுத்தார். அதேபோல் இந்த சீசனில் கடந்த போட்டியில் ரோஹித் சர்மாவை காயம் என்று பெஞ்சில் அமர வைத்து, களமிறங்கினார் ஹர்திக் பாண்டியா. அதுபோல் தோனியை கடந்து ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியில் முடிவு எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் 15 ஆண்டுகளுக்கு பின் டெல்லி அணியிடம் 25 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வி காரணமாக சிஎஸ்கே அணி ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். ஹாட்ரிக் தோல்வி காரணமாக சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

பேட்ஸ்மேனாக சொதப்பும் தோனி
இதனால் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் அடைந்த மோசமான தோல்வியை போல் இந்த சீசனில் சிஎஸ்கே அடையும் என்று பார்க்கப்படுகிறது. இதனிடையே சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் எடுக்கப் போகும் முடிவுகளில் தான் அந்த அணியின் எதிர்காலம் அமையப் போகிறது. ஏனென்றால் 43 வயதாகும் தோனி, சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பேட்ஸ்மேனாக எந்த பங்களிப்பையும் அளிக்கவில்லை.
தோனிக்கு ஓய்வு?
கடந்த 2 சீசன்களில் தோனி விக்கெட் கீப்பராக மட்டுமே சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார். அதனை சாதாரண இளம் விக்கெட் கீப்பரால் கூட செய்ய முடியும். பேட்டிங் ஃபினிஷராக களமிறங்கும் தோனி, ரன் ரேட்டுக்காக களத்தில் இருப்பதற்கு பதில் வெற்றியை நோக்கி ஓடுபவராக இருக்க வேண்டும். இதனால் இந்த சீசனிலேயே ருதுராஜ் கெய்க்வாட் சில போட்டிகளில் தோனிக்கு ஓய்வு கொடுக்க முடிவு எடுக்க வேண்டும்.
ஹர்திக் எடுத்த முடிவு
கடந்த சீசனில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா களமிறங்கிய போது, கடைசி சில போட்டிகளில் ஃபார்மில் இல்லாத ரோஹித் சர்மாவை இம்பேக்ட் பிளேயராக மட்டுமே ஆடினார். இந்த சீசனில் ரோஹித் சர்மாவை பெஞ்ச் செய்து அதிர்ச்சி கொடுத்தார். இத்தனைக்கு ரோஹித் சர்மா போட்டிக்கு 2 மணி நேரத்திற்கு முன்பு வரை கூட பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
பின்பற்றுவாரா ருதுராஜ்?
இதனால் அணிக்கு சிக்கல் என்றால், எந்த வீரரையும் நீக்குவதற்கு ருதுராஜ் கெய்க்வாட் தைரியமாக முடிவு எடுக்க வேண்டும். இதற்கு முன்பாக இந்திய அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்ற போது, சீனியர் வீரர்களான கங்குலி, கும்ப்ளே உள்ளிட்டோரை தைரியமாக நீக்கினார். இதனால் தோனியை நீக்கும் முடிவை எடுத்து ருதுராஜ் கெய்க்வாட் வென்றால், அது சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் உத்வேகத்தை அளிக்கும்.
கேப்டன்சியில் சிக்கல்
அதேபோல் இந்த சீசனுக்கு பின் தோனி விளையாடுவதற்கு வாய்ப்புகள் குறைவு என்பதால், அதற்கான அணியையும் தயார் செய்ய வேண்டிய பொறுப்பு ருதுராஜ் கெய்க்வாட்-க்கு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கேப்டன்சியில் சொதப்பி வரும் ருதுராஜ் கெய்க்வாட், தோனியின் உதவி இல்லாமல் களத்தில் திட்டங்களை செயல்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications