நீதான் உண்மையான நண்பன்.. விராட் கோலிக்கு பாரத ரத்னா விருது கொடுங்க.. ரெய்னா அரசுக்கு கோரிக்கை
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரரும் அவருடைய நண்பருமான சுரேஷ் ரெய்னா வலியுறுத்தியுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியில் ஒப்பற்ற வீரராக விராட் கோலி விளங்கி இருக்கிறார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 123 போட்டிகளில் விளையாடி உள்ள விராட் கோலி 9,230 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய பேட்டிங் சராசரி 46 என்று அளவில் இருக்கிறது. சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின், கவாஸ்கர், ராகுல் டிராவிட்டிற்கு பிறகு விராட் கோலி நான்காவது இடத்தை பிடித்திருக்கிறார்.

அதுமட்டும் இல்லாமல் இந்திய டெஸ்ட் அணியின் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற பெருமையும் கோலிக்கு இருக்கிறது. 68 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திய விராட் கோலி 40 போட்டிகளில் வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறார். இதேபோன்று சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும் 14 ஆயிரம் ரன்கள் விராட் கோலி அடித்திருக்கிறார்.
சச்சின் டெண்டுல்கருக்கு பின்னால் மட்டும் தான் அவர் இருக்கிறார். சச்சின் 462 போட்டிகளில் 18,426 ரன்கள் அடித்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த சச்சினின் சாதனையை விராட் கோலி ஏற்கனவே முந்தியிருக்கிறார். சச்சின் 49 சதம் அடித்த நிலையில் விராட் கோலி 51 சதம் அடித்துள்ளார். விராட் கோலி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்திருக்கிறார்.
அதேபோல் விராட் கோலி 2011 உலகக்கோப்பை, 2024 டி20 உலக கோப்பை ,2013 சாம்பியன்ஸ் கோப்பை, 2008 அண்டர் 19 உலக கோப்பை என நான்கு ஐசிசி தொடரை வென்று இருக்கிறார். டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றுவிட்டு அனைத்து வகையான ஐசிசி தொடர்களை வென்ற வீரர் என்ற சாதனையை படைப்பார் என்று எதிர்பார்த்த போது, திடீரென ஓய்வை அறிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, விராட் கோலி இந்தியாவுக்காக பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். அவருடைய சாதனைகளை பாராட்டி மத்திய அரசு பாரத ரத்னா விருதை வழங்கி அவரை கௌரவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். சுரேஷ் ரெய்னாவில் இந்த கருத்தை விராட் கோலி ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.
இதுவரை கிரிக்கெட் வீரர்களின் சச்சின் டெண்டுல்கருக்கு மட்டும் தான் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் விராட் கோலியும் அந்த பட்டியலில் சேர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். விராட் கோலிக்கு அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது, கேல் ரத்னா விருது உள்ளிட்ட விருதுகள் மத்திய அரசால் ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications