Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கவுதம் கம்பீர் அல்ல.. கேப்டன்சியில் ஹர்திக், பும்ராவை பழிவாங்கிய அந்த நிர்வாகி.. காரணம் என்ன?

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஒரே வாரத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இருவருமே ஆர்வமாக இருந்த போது, திடீரென ஓய்வை அறிவித்திருப்பது ரசிகர்களிடையே பல்வேறு வகையான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஜஸ்பிரிட் பும்ரா நியமனம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென இளம் வீரரான சுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணைக் கேப்டனாகவும் நியமனம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருவருமே இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் கூட கேப்டனாக செயல்பட்ட அனுபவம் கிடையாது.

Not Gautam Gambhir Ajit Agarkar is the reason behind Bumrah and Hardik not considered for Captaincy

சுப்மன் கில் ஆக்ரோஷமான வீரர் என்றாலும், வெளிநாடுகளில் இதுவரை ரன்கள் அடித்து டெஸ்ட் அணியில் நிரந்தர இடத்தை கூட அவரால் பிடிக்க முடியவில்லை. ரிஷப் பண்ட் கேப்டன்சிக்கு கொஞ்சம் கூட பொறுத்தமில்லாத வீரர். இதனால் இந்திய டெஸ்ட் அணி மீண்டும் சரிவை சந்திக்கப் போவதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

இதனிடையே ரசிகர்கள் இடையே இன்னொரு விவாதமும் நடந்து வருகிறது. டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதையடுத்து, இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா கொண்டு வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டார்.

அதற்கு ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை காரணமாக கூறப்பட்டது. ஆனால் டி20 உலகக்கோப்பைக்கு பின் இதுவரை ஒரு போட்டியை கூட ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக மிஸ் செய்யவில்லை. தற்போது காயம் மற்றும் ஃபிட்னஸ் ஆகிய காரணங்களை கொண்டு டெஸ்ட் கேப்டன்சி பொறுப்பு பும்ராவுக்கு மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வெளிநாடு மைதானங்களில் பும்ராவுக்கு இருக்கும் அனுபவம் மற்றும் அறிவு ஆகியவை விராட் கோலிக்கு நிகரான ஒன்றாகும். 2 ஓவர்களிலேயே பிட்சின் தன்மை, எந்த லைன் மற்றும் லெந்தில் வீச வேண்டும் என்பதை துல்லியமாக கணக்கிடுவார். இதனால் பும்ராவுக்கு கேப்டன்சி பொறுப்பை வழங்கி சுப்மன் கில்லை தயார் செய்வதே சரியான முடிவாக இருக்கும்.

ஆனால் ஹர்திக் பாண்டியாவை போல் பும்ராவும் மொத்தமாக புறந்தள்ளப்பட்டுள்ளார். ஆனால் இந்த முடிவுக்கு பின் பலரும் கவுதம் கம்பீர் இருப்பதாக கூறி வருகின்றனர். ஆனால் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் தான் இதுபோன்ற முடிவுகளில் ஆதிக்கம் செலுத்துவதாக தெரிய வந்துள்ளது. அவர் தெர்வுக் குழு தலைவராக பொறுப்புக்கு வருவதற்கு முன்பாகவே, தனக்கு சுதந்திரமாக முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனால் இந்திய அணி விவகாரங்களில் நடக்கும் மாற்றங்களுக்கு அஜித் அகர்கரே காரணம் என்று பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+