நெருப்பு மாதிரி.. இறுதிப்போட்டியில் பொறுப்பை ஏற்ற கிங் விராட் கோலி.. 3 நிமிடங்கள் நடந்த உரையாடல்!
அகமதாபாத்: ஆர்சிபி அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ள நிலையில், அந்த அணி வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார். கேப்டனாக இல்லையென்றாலும், வார்த்தைகள் மூலமாக சரியான நேரத்தில் அணிக்காக முன் நிற்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கி இருக்கிறது. 18 ஆண்டுகளில் இரு அணிகளும் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. இதனால் ஐபிஎல் தொடரின் புதிய சாம்பியனாக உருவாகப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது.

அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதனால் ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. டாஸ் போடுவதற்கு முன்பாக ஆர்சிபி அணியின் வீரர்கள் அனைவரும் கூடி நிற்க, விராட் கோலி பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
சக வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் மாஸாக ஒரு உரையாடலை சிறந்த உடல்மொழியுடன் அளித்தார். அதனை வீடியோவில் காண்பித்த போதே ஆர்சிபி ரசிகர்களுக்கு நரம்பு புடைக்கும் அளவிற்கு உற்சாகம் ஏற்பட்டிருக்கும். ரஜத் பட்டிதார் ஏற்கனவே கொஞ்சம் பதற்றத்துடன் இருந்த நிலையில், சரியான நேரத்தில் விராட் கோலி பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இதுபோன்ற தருணங்களை விராட் கோலி ஏராளமான முறை எதிர்கொண்டுள்ளார். ஐபிஎல் தொடரிலேயே 3 முறை விராட் கோலி இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியை சந்தித்துள்ளார். ஐபிஎல் இறுதிப்போட்டியை பொறுத்தவரை விராட் கோலி 3 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் உட்பட 96 ரன்களை சேர்த்திருக்கிறார். 9 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஐபிஎல் பைனலுக்கு வந்துள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சீசனில் விராட் கோலியின் ஆட்டம் உச்சத்தில் இருந்திருக்கிறது. 15 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி, 8 அரைசதங்கள் உட்பட 614 ரன்களை குவித்துள்ளார். ஆர்சிபி அணியின் பின் வரிசை வீரர்களுக்கு தேவையான அடித்தளத்தை விராட் கோலி அமைத்து கொடுத்துள்ளார். இன்னும் ஒரு போட்டியில் அதனை செய்தால், ஆர்சிபி அணியின் 18 ஆண்டுகால கனவு முடிவுக்கு வரும் என்று பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications