Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெருப்பு மாதிரி.. இறுதிப்போட்டியில் பொறுப்பை ஏற்ற கிங் விராட் கோலி.. 3 நிமிடங்கள் நடந்த உரையாடல்!

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: ஆர்சிபி அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ள நிலையில், அந்த அணி வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார். கேப்டனாக இல்லையென்றாலும், வார்த்தைகள் மூலமாக சரியான நேரத்தில் அணிக்காக முன் நிற்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கி இருக்கிறது. 18 ஆண்டுகளில் இரு அணிகளும் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. இதனால் ஐபிஎல் தொடரின் புதிய சாம்பியனாக உருவாகப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது.

RCB vs PBKS IPL Final 2025 Virat Kohli gave a pep talk to RCB players ahead of the IPL Final against Punjab Kings

அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதனால் ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. டாஸ் போடுவதற்கு முன்பாக ஆர்சிபி அணியின் வீரர்கள் அனைவரும் கூடி நிற்க, விராட் கோலி பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

சக வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் மாஸாக ஒரு உரையாடலை சிறந்த உடல்மொழியுடன் அளித்தார். அதனை வீடியோவில் காண்பித்த போதே ஆர்சிபி ரசிகர்களுக்கு நரம்பு புடைக்கும் அளவிற்கு உற்சாகம் ஏற்பட்டிருக்கும். ரஜத் பட்டிதார் ஏற்கனவே கொஞ்சம் பதற்றத்துடன் இருந்த நிலையில், சரியான நேரத்தில் விராட் கோலி பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

இதுபோன்ற தருணங்களை விராட் கோலி ஏராளமான முறை எதிர்கொண்டுள்ளார். ஐபிஎல் தொடரிலேயே 3 முறை விராட் கோலி இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியை சந்தித்துள்ளார். ஐபிஎல் இறுதிப்போட்டியை பொறுத்தவரை விராட் கோலி 3 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் உட்பட 96 ரன்களை சேர்த்திருக்கிறார். 9 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஐபிஎல் பைனலுக்கு வந்துள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சீசனில் விராட் கோலியின் ஆட்டம் உச்சத்தில் இருந்திருக்கிறது. 15 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி, 8 அரைசதங்கள் உட்பட 614 ரன்களை குவித்துள்ளார். ஆர்சிபி அணியின் பின் வரிசை வீரர்களுக்கு தேவையான அடித்தளத்தை விராட் கோலி அமைத்து கொடுத்துள்ளார். இன்னும் ஒரு போட்டியில் அதனை செய்தால், ஆர்சிபி அணியின் 18 ஆண்டுகால கனவு முடிவுக்கு வரும் என்று பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+