கடைசி பந்து வரை திக் திக்.. ஒரு வழியாக நெஹ்ரா நம்பிக்கையை காப்பாற்றிய வாஷிங்டன் சுந்தர்!
அகமதாபாத்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. குஜராத் அணிக்காக கடைசி வரை களத்தில் நின்ற தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், ஸ்டாய்னிஸ் பந்தில் சிக்ஸ் விளாசி குஜராத் அணியை கரை சேர்த்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களை எடுத்தது. சிறப்பாக ஆடிய சூர்யான்ஷ் ஷெட்கே 29 பந்துகளில் 5 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 57 ரன்களை விளாசினார். குஜராத் அணி தரப்பில் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் 4 பந்துகளில் 57 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 23 பந்துகளில் 40 ரன்களையும் எடுத்து அசத்தினர். கடைசி 2 பந்துகளில் குஜராத் அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது களத்தில் இருந்த வாஷிங்டன் சுந்தர் சிக்ஸ் அடித்து அசத்தினார். இதன் மூலமாக வாஷிங்டன் சுந்தர் குஜராத் அணியின் நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறார். ஏனென்றால் இந்த சீசனில் குஜராத் அணியின் நம்பர் 4 பேட்ஸ்மேனாகவே வாஷிங்டன் சுந்தரை நெஹ்ரா பயன்படுத்தி வந்தார். பவுலிங்கில் பங்களிப்பதை விடவும், வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் பங்களிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்.
ராகுல் டிவாட்டியா, ஷாரூக் கான் உள்ளிட்டோர் பேட்டிங்கில் தொடர்ச்சியாக சொதப்பினர். டாப் 3 பேட்ஸ்மேன்களை வீழ்த்திவிட்டாலே, எளிதாக குஜராத் அணியை வீழ்த்திவிடலாம் என்ற கருத்து நிலவ தொடங்கியது. இதனால் வாஷிங்டன் சுந்தரை நம்பியே நெஹ்ரா பல்வேறு வியூகங்களை வகுத்தார். அவர் கடைசி வரை இன்னிங்ஸை எடுத்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி கொண்டே இருந்தார்.
அதற்கு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வாஷிங்டன் சுந்தர் பலன் கொடுத்துள்ளார். இக்கான சூழலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர், நிதானமாக ரன்களை சேர்த்தார். தேவைக்கேற்ப பவுண்டரிகளை மட்டுமே வாஷிங்டன் சுந்தர் விளாசினார். இந்த இன்னிங்ஸ் வாஷிங்டன் சுந்தரின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று பார்க்கப்படுகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications