97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!
சண்டிகர்: ஐதராபாத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் விஸ்வரூபம் எடுத்த வைபவ் சூர்யவன்ஷி 3 ரன்களில் உலக சாதனையை தவறவிட்டுள்ளார். 28 பந்துகளில் 97 ரன்கள் எடுத்திருந்த வைபவ் சூர்யவன்ஷி, சிக்ஸ் அடிக்க முயற்சித்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் ஒரு நிமிடம் வைபவ் சூர்யவன்ஷி மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மைதானமும் அமைதியானது.
ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. இந்தப் போட்டியில் 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. பிளே ஆஃப் சுற்றுக்கான அழுத்தத்தை வைபவ் சூர்யவன்ஷி எப்படி சமாளிப்பார் என்ற கேள்விகள் எழுந்தன.

ஆனால் வைபவ் சூர்யவன்ஷி கொஞ்சம் கூட கவலைப்படாமல் பேட் கம்மின்ஸ் தொடங்கி ஷகிப் ஹுசைன், இஷான் மலிங்கா, பிரஃபுல் ஹிங்கே உள்ளிட்ட அனைவரையும் விளாசி தள்ளினார். அதிலும் கம்மின்ஸை விளாசியது வியப்பை ஏற்படுத்தியது. அதிரடிக்கு மேல் அதிரடியாக ஆடிய அவர், 16 பந்துகளில் அரைசதத்தை கடந்தார்.
இதன்பின் சிக்ஸ், பவுண்டரியிலேயே டீல் செய்த வைபவ் சூர்யவன்ஷி, 28 பந்துகளில் 97 ரன்களை எட்டி இருந்தார். அப்போது ஒரேயொரு பவுண்டரி அடித்திருந்தால், வைபவ் சூர்யவன்ஷியால் ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதத்தை விளாசி இருக்க முடியும். ஐபிஎல் வரலாற்றில் கிறிஸ் கெய்ல் 30 பந்துகளில் சதம் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது.
இதனை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, அடுத்த பந்தையும் சிக்ஸ் அடிக்க முயற்சித்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் 29 பந்துகளில் 12 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 97 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். வைபவ் சூர்யவன்ஷி ஆட்டமிழந்ததை ஏற்க முடியாமல் ஒட்டுமொத்த மைதானமும் சைலண்ட்டானது.
வர்ணனையில் இருந்த சுனில் கவாஸ்கர், யார் தான் சோகமாக இருக்க மாட்டார்கள்? என்று பேசத் தொடங்கிவிட்டார். அப்போது மைதானத்தில் ஆட்டமிழந்ததை ஏற்க முடியாமல் நின்றிருந்த வைபவ் சூர்யவன்ஷிக்கு அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர். கொஞ்சம் கூட சுயநலமில்லாமல் சதத்தை நெருங்கிய போதும் அதிரடியை குறைக்காமல் ஆடிய வைபவ் சூர்யவன்ஷியை இந்திய அணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications