ஊழலில் சிக்கியோரை காப்பாற்ற நெருக்கடி கொடுத்தது மன்மோகன் அரசு: 'சிஏஜி' வினோத் ராய் 'குண்டு வீச்சு'!
டெல்லி: மத்தியில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி முறைகேடுகள் தொடர்பான சிஏஜி அறிக்கைகளில் இருந்து சிலரின் பெயர்களை நீக்குமாறு ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் தனக்கு நெருக்கடி கொடுத்ததாக முன்னாள் தலைமை கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் கூறினார்.
மத்திய கணக்குத் தணிக்கையாளர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு ஓய்வுபெற்ற வினோத் ராய், "வெறும் கணக்காளர் மட்டுமல்ல' என்ற புத்தகத்தை எழுதி வருகிறார். அந்தப் புத்தகம், வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்படவுள்ளது.

இவர்தான் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேட்டில், அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உத்தேச இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேட்டில் ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தனது பதவிக் காலத்தில் அளித்த சிஏஜி அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
தற்போது முந்தைய காங்கிரஸ் அரசை விமர்சித்து தான் எழுதும் புத்தகம் குறித்து வினோத் ராய் கூறியதாவது:
மன்மோகன் சிங் தனது பதவியைத் தக்கவைப்பதற்காக, தயக்கமின்றி முடிவுகளுக்கு ஒப்புதல் அளித்து, எப்படி மிகப்பெரிய இழப்பு ஏற்படக் காரணமாக இருந்தார் என்பதை நான் எழுதும் புத்தகத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.
எந்த ஒரு விவகாரத்திலும், இறுதி முடிவை பிரதமரே எடுக்க வேண்டும். இதைச் சில நேரங்களில் மன்மோகன் சிங் செய்தார். சில நேரங்களில் தவறி விட்டார். ஆட்சியைத் தக்கவைப்பதற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யக் கூடாது.
சிஏஜி அறிக்கையில் இருந்து சில பெயர்களை நீக்குமாறு, இதற்கு முன்பு என்னுடன் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரிகள் மூலமாகவும் அவர்கள் என்னைச் சந்தித்தனர்.
எனக்கு நெருக்கடி கொடுப்பதற்காக, சில அரசியல் தலைவர்களை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் பணித்திருந்தன. கூட்டணிக் கட்சிகளின் கட்டாயத்துக்காக, அரசை பலிகடா ஆக்கவும் கூடாது.
நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் கூட்டங்களின்போது, அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள், கடினமான கேள்விகளை எழுப்பி நெருக்கடி கொடுத்தனர். இவற்றையெல்லாம் எனது புத்தகத்தில் தெரிவித்துள்ளேன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications