ஊழலில் சிக்கியோரை காப்பாற்ற நெருக்கடி கொடுத்தது மன்மோகன் அரசு: 'சிஏஜி' வினோத் ராய் 'குண்டு வீச்சு'!
டெல்லி: மத்தியில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி முறைகேடுகள் தொடர்பான சிஏஜி அறிக்கைகளில் இருந்து சிலரின் பெயர்களை நீக்குமாறு ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் தனக்கு நெருக்கடி கொடுத்ததாக முன்னாள் தலைமை கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் கூறினார்.
மத்திய கணக்குத் தணிக்கையாளர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு ஓய்வுபெற்ற வினோத் ராய், "வெறும் கணக்காளர் மட்டுமல்ல' என்ற புத்தகத்தை எழுதி வருகிறார். அந்தப் புத்தகம், வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்படவுள்ளது.

இவர்தான் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேட்டில், அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உத்தேச இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேட்டில் ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தனது பதவிக் காலத்தில் அளித்த சிஏஜி அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
தற்போது முந்தைய காங்கிரஸ் அரசை விமர்சித்து தான் எழுதும் புத்தகம் குறித்து வினோத் ராய் கூறியதாவது:
மன்மோகன் சிங் தனது பதவியைத் தக்கவைப்பதற்காக, தயக்கமின்றி முடிவுகளுக்கு ஒப்புதல் அளித்து, எப்படி மிகப்பெரிய இழப்பு ஏற்படக் காரணமாக இருந்தார் என்பதை நான் எழுதும் புத்தகத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.
எந்த ஒரு விவகாரத்திலும், இறுதி முடிவை பிரதமரே எடுக்க வேண்டும். இதைச் சில நேரங்களில் மன்மோகன் சிங் செய்தார். சில நேரங்களில் தவறி விட்டார். ஆட்சியைத் தக்கவைப்பதற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யக் கூடாது.
சிஏஜி அறிக்கையில் இருந்து சில பெயர்களை நீக்குமாறு, இதற்கு முன்பு என்னுடன் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரிகள் மூலமாகவும் அவர்கள் என்னைச் சந்தித்தனர்.
எனக்கு நெருக்கடி கொடுப்பதற்காக, சில அரசியல் தலைவர்களை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் பணித்திருந்தன. கூட்டணிக் கட்சிகளின் கட்டாயத்துக்காக, அரசை பலிகடா ஆக்கவும் கூடாது.
நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் கூட்டங்களின்போது, அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள், கடினமான கேள்விகளை எழுப்பி நெருக்கடி கொடுத்தனர். இவற்றையெல்லாம் எனது புத்தகத்தில் தெரிவித்துள்ளேன்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications