இலங்கைக்கு ராணுவ பயிற்சி அளித்தது இங்கிலாந்து.. இந்திராகாந்தி எதிர்த்தார்... புதிய தகவலால் பரபரப்பு
கொழும்பு: 1980களில் இங்கிலாந்தை சேர்ந்த தனியார் ராணுவ பயிற்சி நிறுவனம் இலங்கை ராணுவத்துக்கு சிறப்பு பயிற்சி அளிக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது என்றும் இதற்கு அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார் என்றும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
1984ஆம் ஆண்டு பஞ்சாப் பொற்கோவிலில் காலிஸ்தான் போராளிகளுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு இங்கிலாந்து உதவியதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தவும் இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கு ராணுவ பயிற்சி அளிக்கவும் இங்கிலாந்து அரசு அனுமதி அளித்ததாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இங்கிலாந்தின் ராணுவத்தில் எஸ்.ஏ.எஸ். என்றசிறப்பு இராணுவப் படையணியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளைக் கொண்ட தனியார் ராணுவ பயிற்சி நிறுவனம் செயப்பட்டு வந்தது.
இந்த தனியார் ராணுவ பயிற்சி நிலையத்தில் இருந்த முன்னாள் ராணுவ அதிகாரிகள் 1980களில் தமிழ் போராளிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிக்க இங்கிலாந்து அரசு அனுமதித்ததாக புதிய ஆவணங்கள் கூறுகின்றன.
மேலும் அப்போதைய இங்கிலாந்து பிரதமர் தாட்சரிடம் இதற்கு இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திர காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் புதிய ஆவணங்கள் கூறுகின்றன.
இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இங்கிலாந்து உரத்து குரல் கொடுத்து வரும் நிலையில் இந்த புதிய ஆவணங்கள் அந்நாட்டு அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications