இலங்கைக்கு ராணுவ பயிற்சி அளித்தது இங்கிலாந்து.. இந்திராகாந்தி எதிர்த்தார்... புதிய தகவலால் பரபரப்பு
கொழும்பு: 1980களில் இங்கிலாந்தை சேர்ந்த தனியார் ராணுவ பயிற்சி நிறுவனம் இலங்கை ராணுவத்துக்கு சிறப்பு பயிற்சி அளிக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது என்றும் இதற்கு அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார் என்றும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
1984ஆம் ஆண்டு பஞ்சாப் பொற்கோவிலில் காலிஸ்தான் போராளிகளுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு இங்கிலாந்து உதவியதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தவும் இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கு ராணுவ பயிற்சி அளிக்கவும் இங்கிலாந்து அரசு அனுமதி அளித்ததாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இங்கிலாந்தின் ராணுவத்தில் எஸ்.ஏ.எஸ். என்றசிறப்பு இராணுவப் படையணியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளைக் கொண்ட தனியார் ராணுவ பயிற்சி நிறுவனம் செயப்பட்டு வந்தது.
இந்த தனியார் ராணுவ பயிற்சி நிலையத்தில் இருந்த முன்னாள் ராணுவ அதிகாரிகள் 1980களில் தமிழ் போராளிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிக்க இங்கிலாந்து அரசு அனுமதித்ததாக புதிய ஆவணங்கள் கூறுகின்றன.
மேலும் அப்போதைய இங்கிலாந்து பிரதமர் தாட்சரிடம் இதற்கு இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திர காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் புதிய ஆவணங்கள் கூறுகின்றன.
இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இங்கிலாந்து உரத்து குரல் கொடுத்து வரும் நிலையில் இந்த புதிய ஆவணங்கள் அந்நாட்டு அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications