எல்லை தாண்டி மீன் பிடித்தால் 2 கோடி அபராதமாம்.. அதிகபட்சம் 20 கோடி.. இலங்கையின் கோமாளித்தன சட்டம்
எல்லை தாண்டி மீன்பிடித்தால் குறைந்தபட்சம் 2 கோடி அபராதம். அதிகபட்சம் 20 கோடியாம். இலங்கை அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வர உள்ளது.
கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களை பிடித்து 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்க வழி வகை செய்யும் சட்ட மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட உள்ளது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அடிக்கடி கைது செய்யப்படுவது இலங்கை கடற்படைக்கு வாடிக்கை. தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தமிழக மீனவர்களின் சுமார் 150 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையில் கிடக்கின்றன. இப்படி அடுக்கடுக்காய் தமிழக மீனவர்கள் இலங்கையால் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.

புதிய சட்டம்
இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக புதிய சட்டம் ஒன்று கொண்டு வரப்படும் என்று இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

20 கோடி அபராதம்
இந்த புதிய சட்டத்தில், எல்லை தாண்டி மீன்பிடிப்பவர்களுக்கு குறைந்தபட்சம் 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதிகபட்சமாக 20 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என்று இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 6ல் மசோதா அறிமுகம்
இதற்கான சட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார். வரும் ஜூலை 6ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தில் இப்புதியச் சட்டம் தாக்கல் செய்யப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் அச்சம்
தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. இதற்கு ராமேஸ்வர மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications